சென்னை,அக்.27- சிஐடியு தமிழ்நாடு மாநில 15 ஆவது மாநாடு வரும் நவம்பர் 4,5,6 ஆகிய தேதி களில் கன்னியாகுமரியில் நடைபெறு கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பலமுனைகளிலிருந்து கொடி - தியாகி கள் - தலைவர்கள் ஜோதிகள் என 15 குழுக்கள் அனைத்து மாவட்டங்களி லிருந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு நவம்பர் 3 அன்று கன்னியாகுமரி வந்தடை கிறது. மாநாட்டுக் கொடி காஞ்சிபுரத்தி லிருந்தும், வெண்மணி தியாகிகள் ஜோதி வெண்மணியிலிருந்தும், சின்னி யம்பாளையம் தியாகிகள் ஜோதி, கோவை மாவட்டம் சின்னியம்பாளை யத்திலிருந்தும், பொன்மலை தியாகிகள் ஜோதி திருச்சியிலிருந்தும், திருமெய்ஞானம் தியாகிகள் ஜோதி மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்தும், புதுவை தியாகிகள் ஜோதி புதுச்சேரியிலிருந்தும், தோழர் லீலாவதி தியாகி ஜோதி மதுரையிலிருந்தும், பி.ராம மூர்த்தி நினைவு ஜோதி மதுரையி லிருந்தும், ஆர்.உமாநாத் நினைவு ஜோதி திருச்சியிலிருந்தும், தோழர் கே.ரமணி நினைவு ஜோதி கோவையிலிருந்தும், தோழர் ஏ.நல்லசிவன் ஜோதி திருநெல் வேலியிலிருந்தும், தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி சென்னையிலிருந்தும், தோழர் சி.கோவிந்தராஜன் நினைவு ஜோதி நெல்லிக்குப்பத்திலிருந்தும், தோழர். ஜெ.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதி நாகர்கோவிலில் இருந்தும் புறப்பட்டு செல்கின்றன. இது தவிர, மாவட்ட அளவில் மறைந்த தொழிற்சங்க தலைவர்கள் பெயரில் துணை ஜோதி குழுக்கள் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றடைகின்றன. இந்த குழுக்கள் அனைத்தும் நான்கு, ஐந்து தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்கின்றன. (மேலும் செய்திகள் 4, 5)