states

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னேற்றம் - சீனா சாதனை

பெய்ஜிங், ஜுன் 3- சீனாவின் உயிர்கள் வாழிடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தரத்தைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படு த்துவதிலும் தொடர் முன்னேற்றம் காணப் படுவதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் சீனாவின் நிலைமை குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விபரங் கள் கிடைத்துள்ளன. காற்றின் தரம்  கடந்த ஆண்டுகளில் இருந்த நிலையில்  அப்படியே இருந்துள்ளது. பல நாடுகளின் காற்றின் தரம் மோசமாகியுள்ள நிலை யில் சீனாவின் முயற்சிகளுக்குப் பலனளித் துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தரம் உயர்வது அல்லது தரம் மோசமாகாமல் அப்படியே இருப்பது என்ற நிலையே தொடர்கிறது என்று சுற்றுச்சூழல் அமைச் சக அதிகாரி ஜியாங் ஹுவோஹுவா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் நகர்ப்புறங்களில் உள்ள மண்ணின் தரம் பற்றிய கவலைகள் அதிகரித்த நிலையில், சீனாவின் நட வடிக்கையால் அந்த மண்ணின் தரம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் தாங்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளதாகவும், வரும் காலத்தில் கூடுதல் பலன்கள் கிடைப் பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதே காலகட்டத்தில் சீனாவின் கடற்பகுதியில் தண்ணீரின் தரம் பொது வாக உயர்ந்துள்ளது. 81.9 விழுக்காடு நீர் தரமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டை விட 0.6 விழுக்காடு அளவு நீர்  தரமான தாக மாறியுள்ளது. மாசுக்கு எதிரான சீனா வின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் தரத்தை உயர்த்து வதற்காக உருவாகியிருக்கும் சரியான தருணத்தை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.