கன்னியாகுமரி, மார்ச் 5- கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக் காடு பகவதியம்மன் கோயிலில் மார்ச் 5 அன்று நடைபெற்ற மாசி கொடை விழாவின் கொடியேற்றும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பவியல்- டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பின், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து மக்களும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் மண்டைக்காடு, பகவதி யம்மனின் அருளை பெருகின்ற சூழ்நிலை யை தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி யுள்ளார். மாவட்ட அறங்காவலர் குழுக் களை பொறுத்தளவில் தமிழ்நாட்டிலுள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட அறங்காவலர் குழுக்களை நியமிக்க வேண்டும்.
அந்த வகையில் இதுவரை 30 மாவட்டங் களுக்கு மாவட்ட அறங்காவலர் குழு நிய மிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அந் தந்த வருவாய் மாவட்டத்தில் இருக்கின்ற சட்டப்பிரிவுகள் 46(1), 46(2), 49(1) உட்பட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில் களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்கின்ற பணியை மேற்கொள்ள உள்ள னர். சட்டப்பிரிவு 46(3) -ன் கீழ் பரம்பரை அறங்காவலர்கள் இருக்கின்ற கோவில்கள் மற்றும் ஸ்கீம் கோவில்கள் உள்ளிட்ட 501 கோவில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்கின்ற பணி நடைபெற்று வரு கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அறங்காவ லர்கள் நியமிக்கின்ற பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்று 20 மாதங்க ளில் 561 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், 2,400 கோவில் களில் திருப்பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2500 கிரா மப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு திருப்பணிகள் மேற் கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி நிதியுதவியை முதலமைச்சர் வழங்கி யுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 100 கோவில்களில் திருப்பணிகள் மேற் கொள்ள தலா ரூ.15 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில் 78 கோவில்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. மீதமுள்ள 22 கோவில்களுக்கும் நிர்வாக அனுமதி வழங்கும் பணி நடை பெற்று வருகிறது.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 8 லட் சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் விரைந்து முடித்து கலசாபிசேகம் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.