states

தேசிய மருத்துவ தகுதித் தேர்வை கைவிட வேண்டும்

சென்னை, ஜூன் 13- தேசிய மருத்துவ தகுதித்  தேர்வை ஒன்றிய பாஜக அரசு  கைவிட வேண்டும் என்று பிர தமர் மோடிக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங் கிணைந்த தேசிய அளவி லான தேர்வாகவும் முது கலை மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத் தேர்வாக வும் ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு செவ்வாயன்று (ஜூன் 13)கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ள நிலையில், நெக்ஸ்ட்  தேர்வை அறிமுகப்படுத்து வது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங் களுக்கும் பெரிய பாதிப் பினை ஏற்படுத்தும். எனவே, நெக்ஸ்ட் தேர்வு  முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போ துள்ள முறையே தொடர  வேண்டும் என்றும் முதல மைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். நமது மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக கல்விச் சுமை மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.