சென்னை,ஜூன் 12- தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளி களுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து, 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகமாக பள்ளி களுக்கு வருகை தந்தனர். இந்த நிலையில், நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கோடை விடுமுறை முடிந்து, முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்! நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையா டுங்கள்,உலகைப் புரிந்து கொள்ளுங் கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.