சென்னை,ஏப்.21- கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபி சிஐடி விசாரணையில் உண்மை வெளிவரும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள் ளார். காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளியன்று (ஏப்.21) பதிலளித்து பேசியதாவது: மிக மோசமான நிதிநெருக்கடி, நிதி மேலாண்மையில் ஒன்றிய பாஜக அரசின் உதவியின்மை ஆகிய கடு மையான சூழலில் ஆட்சி பொறுப்பை ஏற்றநிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அரசு நன்மை செய்து கொண்டு வருகிறது. இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல. திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அர சும் இல்லை. எட்டு கோடி தமிழ்நாட்டு மக்களின் அரசாக, ஒரு கொள் கையின் அரசாக இருக்கிறது. சமூக நீதி-சமத்துவம், சமதர்மம், சகோதரத்து வம், மாநில சுயாட்சி ஆகிய கொள்கை களை உள்ளடக்கியது இந்த ஆட்சி.
நிலைகண்ணாடி
காவல்துறையில் தவறு நடக்கவே இல்லை என்று நான் சொல்லவில்லை. குறைகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் இருக்கத்தான் செய்யும். ஆனாலும், குற்றவாளிகளை இந்த அரசு ஒருபோதும் காப்பாற்றியது இல்லை. இதனால்தான் தமிழ்நாட்டை நோக்கி புதிய நிறுவனங்கள் முதலீடுகள் வருகின்றன. அதே நேரத்தில், ஆளும் கட்சிக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க வேண்டிய எதிர்க் கட்சியும் அதன் தலை வரும் தனது கடமையை செய்ய வில்லை. பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கள் பரப்பப்பட்டன. உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். இதன் மூலம் மிகப்பெரிய மோதல் சம்பவத்தை இந்த அரசும், காவல் துறையும் சாதுர்யமாக மேற்கொண்ட நடவடிக்கை பிற மாநில அரசுகளின் பாராட்டையும் பெற்றது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாப்பு கொடுத்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொள்ளாச்சி பாலியல் புகார் விவகாரத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்களும், திமுகவினரும் போராடினார்கள். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் ஒருவர் அதிமுக இளைஞரணி நிர்வாகி. திமுக ஆட்சிக்கு வந்த வுடன் சிறப்பு நீதிமன்றம் அமைத்துள் ளோம். மூன்று மாதங்களுக்கு முன் விசாரணை தொடங்கப்பட்டு இதுவரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
கொடநாடு வழக்கு சம்பவம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முகாம் அலுவலமாக பயன்படுத்திய பங்களாவில், மர்மமான முறையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுகளில் முரண் பாடுகள் அதிகமுள்ளன. அதிமுக வுக்கு ஏன் இந்த தடுமாற்றம் என தெரியவில்லை. கொடநாடு கொலை, கொள்ளையை அப்போதைய முதலமைச்சரே மறைக்க முற்படும் போது, திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்? சிபிசிஐடி விசார ணையில் முழு உண்மையும் வெளிவரும்.
கார் சிலிண்டர் வெடிப்பு
கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப் பட்டனர். 3 நாளில் இது போன்ற வழக்கை தேசிய புலனாய்வு முக மைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் மத ரீதியிலான மோதல்கள், சாதிச் சண்டை பூசல் தற்போது குறைந்துள்ளது. காவல் நிலைய மரணங்களை தடுப்பதில் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரைக்கும் காவல் நிலைய மரணங்கள் ஏதும் இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். கடந்த ஆட்சியை ஒப்பிடும்போது காவல்நிலைய மரணங்கள் குறைந்து விட்டது. காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலைமை அடைவ தற்கான வழிவகைகளில் இந்த அரசு நிச்சயம் ஈடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு: உத்தரவிட்டது யார்? தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்ல மறுக்கிறார்? அவர் முதலமைச்சராக இருந்த போதும் அதனை சொல்ல வில்லை, இப்போதும் சொல்ல வில்லை என்றார் முதலமைச்சர்.