சிதம்பரத்தில் சிலை மாயம்: கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை
சிதம்பரம்,பிப்.1- சிதம்பரத்தில் திருநீல கண்ட நாயனார் சிலை மாய மானது தொடர்பாக ‘சிலை கடத்தல் தடுப்பு பிரிவு’ காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர். சிதம்பரத்திலுள்ள இளமை யாக்கினார் கோயில் வெளிப் பிரகாரத்தில் இருந்த திரு நீலகண்ட நாயனார் - ரத்தி னாசளை தம்பதியர்கள் சிலை மாயமாகியுள்ளது. முக்கால் அடி உயரமுள்ள இந்த இரண்டு சிலைகளும் மிகவும் பழமையான கற்சிலைகள் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோயில் அரங்காவலர் பழனியப்பா செட்டியார் பிப்.1 அன்று அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல்துறையி னர் மற்றும் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவ லர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜி 20 மாநாடு கருத்தரங்கம்: மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள்
மாமல்லபுரம்,பிப்.1- சென்னையில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டின் கல்வி குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர் புதனன்று (பிப்.1) 3 மணிக்கு மாமல்லபுரம் சென்றனர். அங்குள்ள புராதன சின்னங்களான ஐந்துரதம், அர்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதிகளை பார்வையிட்டனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகையை யொட்டி அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன சின்னங்கள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜி20 பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுங்கசா வடி மூடப்பட்டது. சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள், அதிரடிப்படை வீரர்கள் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். மாமல்ல புரம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் காவல்துறையினரின் சோதனை சாவடியும் அமைக்கப்பட் டுள்ளது. புராதன சின்னங்கள் மின்னொளி யில் மின்னியது அனைவரையும் கவர்ந்தது.
பம்பாய் சகோதரி லலிதா உடல் அடக்கம்
சென்னை,பிப்.1- கர்நாடக இசையில் கொடி கட்டி பறந்த ‘பம்பாய் சகோதரிகள்’ என்று அழைக்கப் படும் சரோஜா, லலிதா ஆகியோரில் ஒரு வரான லலிதா சந்திரன்(84) சென்னையில் காலமானார். பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதா, கேரளாவின் திருச்சூரில் முக்தாம்பாள் - என்.சிதம்பரம் ஐயர் ஆகியோ ருக்கு பிறந்தனர். சகோதரிகள் இருவரும் ஹெச்.ஏ.எஸ். மணி, முசிறி சுப்பிரமணிய ஐயர் மற்றும் டி.கே கோவிந்த ராவ் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்ற னர். பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியதில் இருந்து இவர்கள் இருவரும் ‘பம்பாய் சகோதரி கள்’ என்று அழைக்கப்பட்டனர். லலிதா சந்திரன் சென்னையில் கால மானார். அவரது உடல் புதனன்று(பிப்.1) பிற்பகல் 2.30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
ஆளில்லா விமானம் வீழ்ந்தது ஹமாஸ் உற்சாகம்
காசாத்திட்டு, பிப்.1- பாலஸ்தீனத்தின் காசாத் திட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலின் ஆளில்லா விமானத்தை ஹமாஸ் அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. “ஹெக்சாகாப்டர்” என்று அழைக்கப்படும் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை இஸ்ரேல் அனுப்பியிருந்தது. சில நாட்களுக்கு முன்பாக, மேற்குக் கரைப்பகுதியில் நடத்திய தாக்குதல் ஒன்றில் 9 பேரை இஸ்ரேலிய ராணுவம் கொலை செய்திருந்தது. அந்தத் தாக்குதல் நடந்த அடுத்த நாள் காசாத்திட்டுப் பகுதி மீதும் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. அதே வேளையில், ஆளில்லா உளவு விமானத்தையும் அனுப்பியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானம் காசாத்திட்டுப் பகுதியில் நிர்வாகம் செய்து வரும் ஹமாஸ் அமைப்பின் வசம் சிக்கியது. ஜனவரி 27 ஆம் தேதியன்று அந்த விமானத்தைக் கைப்பற்றினர். அது குறித்த தகவலை வெளியிடாமல் வைத்திருந்தனர். அந்த விமானத்தை ஆய்வு செய்ததில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் அதன் திட்டங்கள் குறித்த சில ரகசியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்தத் தகவல்களைத் திரட்டிய பிறகு தற்போது விமானத்தைக் கைப்பற்றிய தகவலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, இஸ்ரேலும் ஆளில்லா விமானம் சிக்கியதை ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் 30 குழந்தைகள் உள்ளிட்ட 170 பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் தாக்குதல்களும் தொடங்கி விட்டன. ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து குழந்தைகள் உட்பட 30 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 16 ஆண்டுகளில் 2022 ஆம் ஆண்டுதான் மிக மோசமானது என்று பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
உலகச் செய்திகள்
அமெரிக்காவின் காவல்துறை கொடூரமாக நடந்து கொள்கிறது. இந்தக் கொடூரமான நடவடிக்கைகள் மிகவும் கடுமையான மனித உரிமை மீறல்கள் என்று கியூபாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கக் காவல்துறையின் ஆயுதங்களால் ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், நிறவெறித் தாக்குதல்கள் அடிப்படையான மனித உரிமைகளை மறுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பியாவின் இடதுசாரி அரசு, ஆயுதந்தாங்கிய குழுக் களோடு பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தப் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அல்போன்சோ பிரதா தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் பெரும் அளவில் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், வன்முறை அதிகமாகக் காணப்பட்ட சில மாகாணங்களில் பெரும் அளவில் தாக்குதல்கள் குறைந்துள்ளன என்றார்.
சர்வதேச நிதியத்திடம்(ஐ.எம்.எப்) இருந்து 470 கோடி அமெரிக்க டாலர் கடனை வங்கதேசம் பெற்றிருக்கிறது. ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் கடன் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதில் வங்கதேசத்திற்கான கடனுக்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். வங்கதேசத்தின் பணவீக்கம் 8.7 விழுக்காடு என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால், உண்மையில் அதன் மதிப்பு அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.