ராய்ப்பூர், டிச. 3 - சத்தீஸ்கர் மாநிலத்தில் பட்டி யல் - பழங்குடியினர், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு வரம்பு 76 சதவிகிதமாக அதிகரிக் கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் மாநில கல்வி, வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் பட்டியல் வகுப்பினர் - பழங்குடியின ருக்கான (SC-ST) இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களை அம்மாநில காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாக்கள் வெள்ளிக் கிழமையன்று சத்தீஸ்கர் சட்டப்பேர வையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய மசோதாக்கள் மூலம் பட்டியல் வகுப்பினருக்கு (Sched uled Caste) 13 சதவிகிதம், பட்டியல் பழங்குடியினருக்கு (Scheduled Tribers) 32 சதவிகிதம், இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Classes) 27 சத விகிதம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு (Economically Weaker Section (EWS) 4 சதவிகிதம் என இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சத்தீஸ்கர் மாநில மொத்த இடஒதுக்கீடு வரம்பு 76 சத விகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் இந்த மசோதாக்களைத் தாக்கல் செய்து, முதல்வர் பூபேஷ் பாகேல் உரையாற்றினார்.
அப்போது, முந்தைய பாஜக அரசாங்கங்க ளால், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினரை கணக் கெடுப்பு செய்யக்கூடிய தரவு ஆணையத்தை உருவாக்க முடிய வில்லை. ஆனால், தனது அரசு அமைத்த ஆணையம், சத்தீஸ்கர் மக்கள்தொகையில் பிற்படுத்தப் பட்ட மக்கள் 42.41 சதவிகிதம், உயர் சாதி ஏழைகள் 3.48 சதவிகிதம் என அறிக்கை அளித்திருப்பதாக குறிப் பிட்டார். மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக உறுப்பி னர்கள், பட்டியல் வகுப்பினருக் கான இடஒதுக்கீட்டை 16 சதவிகி தமாகவும், உயர்சாதி ஏழைகளுக் கான இடஒதுக்கீட்டை 10 சதவிகித மாக அதிகரிக்க வேண்டும் என்றும் திருத்தங்களைக் கொண்டு வந்த னர். அவற்றுக்குப் பதிலளித்த முதல் வர் பூபேஷ் பாகேல், 2011-க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வில்லை என்றும், பட்டியல் வகுப்பி னருக்கான கணக்கெடுப்பு நடை முறைக்கு வரும்போது அதற்கேற்ப இடஒதுக்கீட்டில் திருத்தம் செய்யப் படலாம் என்றும் தெரிவித்தார். சுமார் 5 மணிநேரம் வரை நடை பெற்ற விவாதத்திற்கு பின் 2 மசோ தாக்களும் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஆளு நரின் ஒப்புதலைப் பெற்றபின், சபா நாயகர் தலைமையில், அனைத்து கட்சிகளின் எம்எல்ஏ-க்களும், பிரத மர் நரேந்திர மோடியை சந்திப் பார்கள் என்றும், அப்போது, சத்தீஸ் கர் அரசின் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்களை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் வைக்குமாறு கோரிக்கை விடுப்பார் கள் என்றும் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.