சென்னை,மே 21- சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றி களை குவித்துள்ள அவர், மலை யேற்றத்திலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் சுமார் கடந்த ஓராண்டாக மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு. இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக் கொண்டார். எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயா ரானார். கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கி னார். கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் 8,850 மீட்டர் உயரத்தை அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கி யுள்ளார். ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமை யான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜ சேகர் அடைந்து சாதித்து காட்டி யுள்ளார்.