சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை டிச.12ல் துவக்கம்
சென்னை,டிச.8- இலங்கையின் வடக்கு யாழ்ப் பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து ள்ளது. சென்னை- யாழ்ப்பாணம் இடையே யான விமான சேவை வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. முதல் கட்டமாக வாரத்துக்கு 4 விமானங்கள் இயக்கப் படும். ஏற்கனவே 2019-ம் ஆண்டு அக்டோபரில் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்தை தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அதே ஆண்டு நவம்பரில் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விமான போக்குவரத்து நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிற 12-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. யாழ்ப்பா ணத்தின் பாலாவி பகுதியில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளன. விமான சேவை தொடங்கப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இதற்கான ஓடுபாதைகள் சீரமைக்கப்பட்டு வரு கின்றன. இந்த விமான சேவையை யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்கள் வர வேற்றுள்ளனர்.
எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சென்னை, டிச. 8- எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்புரயில் (06068-06067) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் எர்ணா குளத்தில் திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்கா வுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலை யத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடை யும். அன்றையநாள் நண்பகல் 12.30 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆளுநருக்கு தனியாக எந்த அதிகாரமும் இல்லை மாநிலங்களவையில் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேச்சு
புதுதில்லி, டிச.8- ஆளுநர் ஓர் அலங்காரப் பதவி மட்டுமே, அவருக்குத் தனியாக செயல் பட எந்தஅதிகாரமும் கிடையாது என்றும் இது தொடர்பாக பல்வேறு ஆணையங்கள் அளித்துள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் கூறினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநி லங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் நேரத்தில் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது: மாண்புமிகு தலைவர் அவர்களே, நான் கூறப்போகும் விஷயங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் கூறக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெ னில் நான் ஆளுநர்கள் பங்கு குறித்தும் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசு களுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்தும் பேச இருக்கிறேன். அரசியல் நிர்ணயசபையில் விவாதங்கள் நடைபெற்றபோது, ஆளுநரின் நிலை என்பது ஓர் அலங்காரப் பதவி மட்டுமே என்றும், அவருக்கு என்று தனியாக எந்த அதிகார மும் கிடையாது என்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறியிருக்கிறார். அரசமைப்புச்சட்டமும் எந்தவொரு விஷயத்திலும் அமைச்சரவையின் முடிவை மீறும் அதிகாரத்தை ஆளு நருக்கு அளித்திடவில்லை. புதிய அரசமைப்புச்சட்டத்தின் விதிகளின்படி, ஆளுநர் என்பவர் அனைத்து விஷயங் களிலும் அமைச்சரவையின் அறி வுரைக்கு ஏற்பதான்நடந்துகொள்ள வேண்டும். அரசமைப்புச்சட்டம் இயற்ற ப்பட்டு 73 ஆண்டுகளுக்குப்பிறகும் இதில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
பாலமாக இருக்கவே ஆணையங்கள் அழுத்தம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப் படும் ஒரு சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும் அல்லது அரச மைப்புச்சட்டத்தின் 200ஆவது பிரிவின் படி மறுபரிசீலனை செய்வதற்காக உட னடியாகத் திருப்பி அனுப்பிடவேண் டும். ஆனால் இவ்வாறு செய்வ தற்குப் பதிலாக சமீப காலங்களில் அர சமைப்புச்சட்டத்தின் 163 மற்றும் சில விதிகள் தவறாக மேற்கோள்காட்டப்படு கின்றன. சர்க்காரியா ஆணையம், எம்.எம். புஞ்ச்சி ஆணையம், நீதியரசர் வெங்கடாசலய்யா ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை ஆளுநரின் முக்கியத்துவம் குறித்து அழுத்தமாகக் கூறி அவருடைய பாரபட்சமற்ற நிலை யினை அழுத்தமாகக்கூறி, அவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்திட வேண்டும் என்று கூறியிருக்கின்றன. மாநிலத்திற்கு ஓர் ஆளுநரை நியமிக்கும் போது அம்மாநிலத்தின் முதல்வரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பல்வேறு ஆணை யங்கள் பரிந்துரைத் திருக்கின்றன. ஆனால் இந்தப் பரிந்துரைகளில் எதுவும் ஒன்றிய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்த ஆணை யங்கள் அளித்திட்ட பரிந்துரைகள் அனைத்தும், குறிப்பாக ஆளுநர் குறித்துக் கூறியிருக்கும் பரிந்துரை களை ஒன்றிய அரசாங்கம் அமல் படுத்திட அவசரமாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்து கிறேன். இவ்வாறு டாக்டர் ஜான் பிரிட்டாஸ் பேசினார். இவரது கோரிக்கையுடன் கே.ஆர். என். ராஜேஷ்குமார், பி.வில்சன் (திமுக), ஏ.ஏ.ரகிம், டாக்டர் சஸ்மித் பத்ரா, அமர் பட்நாயக், டாக்டர் ஃ பாசியா கான், டாக்டர் சிவதாசன் (சிபிஎம்), பினாய் விஷ்வம் (சிபிஐ), சந்தோஷ் குமார் பி. ஆகியோர் தங்களையும் இணைத்துக்கொண்டார்கள். (ந.நி.)
பெரு ஜனாதிபதி நீக்கம்
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
லிமா, டிச.8- தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரு நாட்டில் கடுமையான பொருளா தார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை காஸ்டில்லோ அறிமுகம் செய்தார். இந்தத் திட்டங் களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் முட்டுக்கட்டை போட்டு வந்தது. அவரைப் பதவி நீக்கம் செய்யவும் தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். ஜனாதிபதி முன்வைத்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது. தனது திட்டங்களை செயல்படுத்த உதவும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, தேர்தலை நடத்த காஸ்டில்லோ ஆணையிட்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் அவரை நீக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றிவிட்டனர். காஸ்டில்லோவின் கட்சியினரே நாடாளு மன்றத்தைக் கலைக்கும் அவரது திட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலின்போது, காஸ்டில்லோவுடன் இணைந்து துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு துணை ஜனாதிபதியாக தற்போது பணி யாற்றி வரும் டினா போலுவார்ட்டே ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். கைது தலைநகர் லிமாவில் இருந்த காஸ்டில்லோ கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெருவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் கவலை யளிப்பதாக மெக்சிகோவின் ஜனாதிபதி அம்லோ தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள டொமினிகா தீவு நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் டொமினிகா தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது முறையாக வென்றுள்ள இக்கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் மீண்டும் பொறுப்பேற்கவிருக்கிறார். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 19ஐ ஆளுங்கட்சி கைப்பற்றியது.
சகோதர நாடுகளுடன் பொது நலன்கள் உள்ள பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கத் தாங்கள் தயாராக இருப்பதாக கியூபாவின் ஜனாதிபதி டயஸ் கானெல் கூறியுள்ளார். கரீபிய நாடுகள்-கியூபா கூட்டு ஏழாவது உச்சி மாநாடு பார்படாசில் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த கியூப ஜனாதிபதி இக்கரு த்தைத் தெரிவித்தார். பார்படாஸ், கயானா, ஜமைக்கா மற்றும் டிரினிடாட்-டொபாகோ ஆகிய நாடுகளுடன் தூதரக உறவை ஏற்படுத்தி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் இந்த மாநாட்டில் அனைவரும் நினைவு கூர்ந்தனர்.
சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் 2.13 விழுக்காடு அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பு உயர்ந்தது. சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லாமல் நிலையாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளன என்று சீனாவின் அந்நியச் செலாவணி அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பெருந்தொற்றிலிருந்து மிக விரைவாக சீனா மீண்டதுதான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.