states

2015-21 அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல்

சென்னை, ஜூன் 21- 2015 முதல் 2021 வரையிலான அதிமுக  ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2015 முதல் 2021 வரை யிலான அதிமுக ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளது. 62 சதவீத கூட்டுறவு சங்கங் களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்துள்ளது. அதிக பட்சமாக வடசென்னையில் உள்ள பேல்ஸ் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் ரூ.8  கோடி அளவுக்கு முறைகேடு அரங் கேறியுள்ளது. கூட்டுறவு தணிக்கை யின்படி கிட்டத்தட்ட 1,068 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வ ராக பதவியேற்ற பின் 2017 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 223 கூட்டுறவு சங்கங்களில் ரூ.28 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. இந்த விவ காரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கக் கோரி கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது.  2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.