states

தமிழகத்தில் 4 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ.20  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழைக் கும், 21 மற்றும் 22 ஆம் தேதி களில் ஒரு சில மாவட்டங்க ளில் கனமழைக்கும் வாய்ப்புள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயி றன்று (நவ.20) காலை காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி யுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காரைக்காலி லிருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக் கேயும், சென்னையிலிருந்து சுமார் 670 கிலோ மீட்டர் தொலை வில் கிழக்கு - தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதி களை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். திங்களன்று (நவ.21) வட தமிழகம், புதுவை மற்றும் காரை க்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ கத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விழுப்புரம், செங்கல் பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச் சேரி பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப் புள்ளது. 22 ஆம் தேதி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ கத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், காஞ்சி புரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23 மற்றும் 24 ஆம் தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்ய க்கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.