- நீலகிரி மாவட்டம் தேவா லா பகுதியில் மையம் கொண்டுள்ள பிஎம்2 (PM2) மக்னா யானை துரத்தியதில் வனக்காப் பாளர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். செவ்வா யன்று கேரள எல்லைக் குள் சென்ற மக்னா யானை, புதனன்று மீண்டும் தமிழ்நாட்டு எல் லைக்குள் வந்து தனது ஆட்டத்தை ஆரம்பித் துள்ளது. தேவாலா பகுதி யில் தொடர்ச்சியாக வீடு களை சேதப்படுத்தி, மூதாட்டி ஒருவரையும் மக்னா யானை கொன்றுள்ளது.
- கேரள மாநிலம் கோழிக் கோடு தொட்டானூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி யில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4-ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசை வென்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம், பார்வதி இந்து மாணவியாவார்; இவர் இஸ்லாம் மத நூலான குரான் ஒப்புவித்தல், அரபி மொழியில் அடுக் கடுக்காக பேசியதும் அனைவரையும் ஆச்சரி யப்படுத்தியது.
- தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் ஆர்எஸ்எஸ் மேல் முறையீடு செய்துள்ளது. அனுமதி வழங்கிய செப்ட ம்பர் மாத உத்தரவை உறுதி செய்யவும் மனு வில் கேட்டுள்ளது. 44 இடங்களில் உள்ளரங்க நிகழ்வாக நடத்த சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
- குதிரை பேர முயற்சியில் தோல்வியடைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் களை துன்புறுத்த மத்திய அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என டிஆர்எஸ் எம்எல்சி கே. கவிதா குற்றம்சாட்டியுள் ளார்.
- அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் விதிகளின் கீழ் ஆல்பாஜியோ நிறுவனத் துக்குச் சொந்தமான ரூ.16 கோடி நிலையான வைப்புத் தொகையை அமலாக்கத்துறை பறி முதல் செய்தது.
- தமிழ்நாட்டில் ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவது ஏற்கத்தக்கது அல்ல; எந்த சமூகத்தினரும் ஆபாச நடனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தில் மீத முள்ள 4.5 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சி யைப் பற்றி மாநில மக்கள் மிகவும் கவலைப்படு கிறார்கள். சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கு லைந்துவிட்டது என மாநில காங்கிரஸ் தலை வர் அமரீந்தர் சிங் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
- சட்டத்தையும் ஜனநாய கத்தையும் காப்பாற்று வதே தற்போது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதைக் காப்பாற்ற நாங் கள் எதையும் செய்வோம் என சிவசேனா(உத்தவ்) தலைவர் ஆதித்யா தாக்க ரேவை சந்தித்த பிறகு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசி னார்.
- ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு குழு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. பிரான்ஸ், ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்கள். ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச ஆணையத்தின் தலைவரான ஒகாடா யாசுவோ தலைமையிலான இக்குழு, அவரவர் அனுபவங்களின் அடிப்படையில் தங்கள் புரிதல்களை மேம்படுத்திக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருந்ததாக ஒகாடா யாசுவோ தெரிவித்துள்ளார்.
- வியட்நாமுடனான உறவை மேம்படுத்துவதற்கான தீர்மானம் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிலிப்பைன்ஸ்-வியட்நாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்புறவுக் கழகத்தைத் தொடங்குகிறார்கள். வியட்நாமின் நாடாளுமன்றத் தலைவரான உவோங் டின் ஹூயு, மூன்று நாட்கள் பயணமாக பிலிப்பைன்ஸ் வந்துள்ளார். அதையொட்டியே, நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
- தென் பசிபிக் பகுதியில் உள்ள சாலமன் தீவுகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுனாமி ஏற்படலாம் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்கள். 7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் ஹோனியாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெற்றனர். இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.