states

தீக்கதிர் விரைவு செய்திகள்

38 மாத சம்பளப் பாக்கி வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள்

சம்பளப் பாக்கி உள்ளிட்ட 38 மாத சம்பள நிலுவை தொகையை உட னடியாக வழங்கக் கோரி கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) ஊழியர்கள் டிசம்பர் 31 முதல் காலவரையற்ற வேலை நிறுத்  தத்தை அறிவித்துள்ளனர்.  கர்நாடகா மாநில சாலை போக்கு வரத்துக் கழகம் (KSRTC), பெங்களூர் பெருநகர போக்குவரத்துக் கழகம் (BMTC), கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் (KKRTC), வடமேற்கு சாலை போக்குவரத்துக் கழ கம் (NWRTC) ஆகியவை சம்பளப் பாக்கி  உள்ளிட்ட 38 மாத சம்பள நிலுவை தொகை  என ரூ.8,010 கோடி நிலுவை வைத்துள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிரட்டிப் பணம் பறித்த அமலாக்கத்துறை  உதவி இயக்குநர் சிம்லாவில் சிபிஐ சோதனை

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் அமலாக்கத்துறை உதவி இயக்கு நராக இருப்பவர் விகாஸ் தீப்.  இவர் சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், பணமோசடி தடுப்புச் சட்ட  வழக்கில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், ரூ. 3 கோடி பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.  மிரட்டலுக்கு பயந்து தொழிலதிபர் முதற்கட்டமாக 40% தொகை (தோராய மாக ரூ.1 கோடி) பணம் அளித்துள்ளார். பணம் கொடுத்த பின் தொழிலதிபர் அம லாக்கத்துறை அதிகாரி விகாஸ் தீப் மிரட்டி  பணம் பறித்ததாக மத்திய புலனாய்வு  துறையில் (சிபிஐ) புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட சிபிஐ சண்டி கர் பிரிவு, சிம்லாவில் உள்ள அமலாக்கத்  துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி யது. இந்த சோதனையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ரூ.1.15 கோடி ரொக்  கம் கைப்பற்றியுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த தில்லியில் உள்ள  பஞ்சாப் நேஷனல் வங்கியில் மூத்த மேலா ளரான விகாஸ் தீப்பின் சகோதரர் கைது  செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. ஆனால் விகாஸ் தீப் மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்  பாக உறுதியாக எவ்வித தகவலும் வெளி யாகவில்லை. குறிப்பாக தொழிலதிபரி டம் ரூ.50 லட்சம் மட்டுமே பணம் கேட்டதாக வும், ரூ.3 கோடி கேட்கவில்லை ; தொழிலதி பரிடம் ரூ.1 கோடி வாங்கவில்லை ; கைப்  பற்றப்பட்ட பணம் என்னுடையது என விகாஸ் தீப் கூறியதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

மன்மோகன் சிங் உடல் தகனம், நினைவிடம்: சர்ச்சையை உருவாக்கும் மோடி அரசு

அசோக் கெலாட் கண்டனம்

புதுதில்லி மன்மோகன் சிங் உடல் தக னம், நினைவிடம் தொடர்  பாக  மோடி அரசு தேவை யற்ற சர்ச்சையை உருவாக்கு கிறது என காங்கிரஸ் மூத்த தலை வரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில்,”மன்மோகன் சிங் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் உடலை தகனம் செய்வது மற்  றும் அவருக்கு நினைவிடம் கட்டு வது தொடர்பாக தேசிய ஜனநாய கக் கூட்டணி (என்டிஏ) அரசு தேவை யற்ற சர்ச்சையை உருவாக்கியுள்  ளது. அரசின் இந்த நடவடிக் கைக்கு நாட்டு மக்கள் தங்கள்  அதிருப்தியை வெளிப்படுத்தியுள் ளனர். அதன் பிறகு பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தினால்தான், பாஜக அரசு எதிர்காலத்தில் அவ ருக்கு நினைவிடம் கட்டுவதாக அறிவித்துள்ளது.  கடந்த 2010ஆம் ஆண்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பைரேன் சிங் ஷெகாவத் இறந்த பிறகு, பாஜகவின் எந்த  கோரிக்கையும் இன்றி காங்கிரஸ் அரசு நினைவிடம் கட்டியது. அதே  போல 2012ஆம் ஆண்டு மகா ராஷ்டிராவில் பால் தாக்கரேவின் மரணத்துக்கு பிறகு, காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்கு களுக்காக மும்பை சிவாஜி பூங்கா வில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி யது. காங்கிரஸ் அனைத்து கட்சி களின் தலைவர்களுக்கும் மரி யாதையுடன் பிரியாவிடை கொடுத்  தது. ஆனால், பாஜக மன்மோகன் சிங் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது” என கண்டனம் தெரிவித்தார்.

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் தூத்துக்குடியில் நாளை  முதல்வர் துவக்கி வைக்கிறார்

தூத்துக்குடி,டிச.28- புதுமைப் பெண் திட்டம் அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் தற்போது விரிவுபடுத்தப்படுகிறது.  இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் டிசம்பர் 30 அன்று துவக்கி வைக்கிறார். இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 75,028 மாணவியர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைவார்கள். தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினையும்  முதலமைச்சர் மாலையில்  திறந்து வைக்கிறார்.  இந்த டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது.

வாகன இரைச்சலை தடுக்க போக்குவரத்து  காவலர்களுக்கு நவீன கருவி அறிமுகம்

சென்னை,டிச.28- வாகன இரைச்சலை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கான நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக்காவலர்களுக்கு வாகனத்தின் இரைச்சல்கள் மூலம் செவித்திறனின் அளவு 90 டெசிபலில் இருந்து 150 டெசிபல் வரை பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மனிதனின் சராசரி செவித்திறன் அளவு 80 டெசிபல் ஆக உள்ள நிலையில், தொடர்ந்து 90 முதல் 150 டெசிபல் வரை போக்குவரத்து காவலர்கள் தினமும் 8 மணி நேரம் வாகன இரைச்சல் சத்தத்தை கேட்டு செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை உருவாக்கவும் வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒவ்வொரு போக்குவரத்து காவலர்களுக்கும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனிப்பயன் இயர் பிளக் (Ear Plug) என்னும் வெளி சத்தத்தை குறைக்கும் கருவியை அறிமுகம் செய்து,  சோதனை முறையில் இந்த கருவி நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவலர்களின் பயன்பாட்டில் வந்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை போக்குவரத்து காவலர்களுக்கு இந்த நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள் ‘காவல் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்வதை உறுதி செய்க! உயர்கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை,டிச.28- மாணவிகள் காவல் உதவி செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,  பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்புகொள்ள உதவும் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவசர காலங்களில் சிவப்பு நிற`அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் (Google Play Store, App Store)இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரித்து ஆர்ப்பாட்டம்

 சென்னை,டிச.28-  நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசினார். இதனை நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. நாடு முழுவதும் அமித் ஷாவை கண்டித்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே அண்ணல் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அண்ணல் அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை உச்சரித்து வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர்  பங்கேற்றனர். 

அண்ணா  பல்கலை.யில் ஆளுநர் ஆய்வு

சென்னை,டிச.28- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.  இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர்கள், 25 மாணவ, மாணவிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தார்.

“மதுக்கடைகளை குறையுங்கள்”

மதுரை,டிச.28- தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசார ணையின் போது நீதிபதி கள், இருக்கும் மதுக் கடை களை குறைக்க வழியை பாருங்கள்; அதை விடுத்து  மதுக்கடைகளை அதிக மாக்குவதால் என்ன பயன்?  தற்போது மூலை  முடுக்கெல்லாம் மதுக்கடை, பள்ளி கல்லூரி அருகே மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.  தொடர்ந்து, பூதிப்புரம் கண்மாய் பகுதியில் கடை அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தர விட்டுள்ளது.

400 இடங்களில் ஜல்லிக்கட்டு

சென்னை,டிச.28- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு 400 இடங் களில் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடத்தத் திட்டமிடப் பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரி வித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல்,  மஞ்சு விரட்டு, வடமாடு என பல பெயர்களில் மாடு பிடிக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜன வரி முதல் மே மாதம் வரை நடைபெறும் இந்த ஜல்லிக் கட்டு போட்டிகளை ஒருங்கி ணைக்கும் வகையில் www.jallikattu.tn.gov.in என்ற இணைய தளத்தை அரசு தொடங்கியுள்ளது.  இந்த இணையதளத்தில் போட்டி நடக்கும் ஊர், காளை மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து அனுமதிச் சீட்டு பெறுவது அவசியம் என கால்நடை பராமரிப்புத் துறை சிறப்புத் திட்ட அதிகாரி நவநீத கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில்  பாரபட்சம் இன்றி நடவடிக்கை  கனிமொழி எம்.பி., பேட்டி 

தூத்துக்குடி, டிச.28 -  அண்ணா பல்கலைக்கழக மாணவி  விவகாரத்தில் எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் குற்றச்சாட்டிற்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்துள்ளார். “அன்பு உள்ளங்கள்” என்ற பெய ரில் ஆதரவற்ற முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி ஊராட்சியில் உள்ள அன்னை தெரசா நகரில் அமைந் துள்ளது. முதியோர் இல்ல புதிய கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக துணைப்  பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி பங்கேற்று முதியோர் இல்ல புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், “அண்ணா  பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமுமின்றி குற்ற வாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது  என்பதுதான் எல்லோரின் விருப்பம். கடந்த அதிமுக ஆட்சியில், இது போன்று நடந்த ஒரு குற்றச் செயலில், அதன் எப்ஐஆர்-ஐ மறைத்துள்ளனர். பாலியல் தொல்லை தந்ததோடு மட்டு மில்லாமல் சங்கிலியையும் அந்த குற்ற வாளி பறித்துள்ளார். ஆனால், அதைச் சங்கிலி பறிப்பு வழக்காக மட்டும்  பதிவு செய்துள்ளனர். குற்றவாளிக்கு  அன்றே சரியான தண்டனை விதித்திருந் தால், ஒரு கண்காணிப்பாவது இருந்தி ருக்கும். அப்போது, அவர்கள் கடமையை செய்யத் தவறியதால், இன்று இது போன்ற ஒரு சம்பவம் நடக்க காரணமாகிவிட்டது. இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாகப் படிக்க வரக் கூடிய மாநில மாக தமிழ்நாடு உள்ளது. இச்சம்பவத் தின் மூலம் எல்லா பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்துச் சொல்லும்  போது, அது பெண்களின் கல்வியை யும், எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். திமுக தலைமையிலான அரசு பெண்களின் உரிமைக்காகவும் பெண்க ளின் கல்விக்காகவும், அவர்களின் உரிமையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது. பெண் கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக் கிறது. அதனால்தான் உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். விழாவில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன்,  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.