states

வடகிழக்கு பருவமழையில் காவிரி டெல்டா

2000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் வரும் அதிக அளவு மழை நீர் டெல்டாவில் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்தை தந்தது. எனவே தான் காவிரியை கட்டுப் படுத்த  1080 அடி நீளம், 55 அடி அகலம், 5 அடி உயரத்தில் ஒரு தடுப்பு அணையை கட்டினான் கரிகால் சோழன். அதுதான் கல்லணை. பின்பு கரிகால் சோழனுக்கும் சேர பாண்டிய மன்னருக்கும் இடையே வெண்ணி பறந்தலை என்னுமிடத்தில் (தற்போது  கோவில் வண்ணி) போர் நடந்து அந்தப் போரில் வெற்றி பெற்ற கரிகாலன் போர் நினைவாக கல்லணையிலிருந்து காவிரிக்கு இணையாக ஒரு புதிய ஆறை வெட்டி அதற்கு வெண்ணியாறு என பெய ரிட்டான். அது மருவி வெண்ணாறு என அழைக்கப்படுகிறது. 1839 முதல் 1851 -ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தற்போதைய கல்லணையை, கரிகாலன் கட்டிய கல்லணையை அடித்தளமாக கொண்டு அதன் உயரத்தை கூட்டி தற் போதைய கல்லணையை கட்டினார். காவிரி நீர் பாசன முறையை நவீனப் படுத்த முக்கொம்பு அணை முதல் அணைக்கரை கீழ்அணைவரை கட்டிய வர் சர் ஆர்தர் காட்டன். 1851 முதல் 1902க் குள் வெட்டாறு குடமுருட்டி திருமலை ராஜன் ஆறு காவிரி ஆறுகளில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டன. கல்லணைக் கால்வாய் 1929இல் துவங்கி 1935இல் முடிவடைந்தது. மேட்டூர் அணை, கல்லணைக் கால்வாய், வட வாறு விரிவாக்கம். இந்த மூன்று திட்டங்க ளையும் வடிவமைத்தவர்கள் கர்னல்  டபுள் யுஎம் எல்லிஸ் மற்றும் சர் கிளமெண்ட் முல்லிங் என்கிற பொறியாளர்கள். கல்ல ணைக் கல்வாய் 3,01,000 ஏக்கர் பாச னம் தருகிறது. காவிரி பாசனத்தை முறைப்படுத்தி யவர்கள், பெரும் பங்காற்றியவர்கள் மன்னர்கள், பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஆவார்கள்.  ஆனால் சுதந்திரத்திற்கு பின் நமது ஆட்சியாளர்கள் என்ன செய்தார் கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. டெல்டாவில் காவிரி வெண்ணாறு கொள்ளிடம் கல்லணை கால்வாய் மற்றும் 36 கிளை ஆறுகள் உள்ளன. A சேனல் வாய்க்கால்கள் 1505ம் A,B,C,D,E  வாய்க்கால் சுமார் 2 லட்சம் வாய்க்கால்கள் உள்ளன. 1200 ஏரிகளும் உள்ளன. மேட்டூரில்   திறக்கப்படும் நீர் கல்லணையை மூன்றரை நாட்களில் வந்தடையும். கடைமடை செல்ல ஏழு நாட்கள் ஆகும். ஆனால் தற்காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் டெல்டா வில் தாளடி, சம்பா நடவு இன்று வரை சரிபாதி கூட நடைபெறவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது. பல நூறு ஏக்கர் குறுவை தொடர் மழையால் அறுவடை செய்ய முடி யாமல் நாசமாகி விட்டது. வடகிழக்கு பருவ மழை விவசாயிகளுக்கு நன்மை செய்வ தை விட கெடுதல் செய்வதே அதிகம். மழை நீர்  உடனடியாக வடிய சரியான ஏற்பாடு இல்லை. அதனால் நடவு செய்த  இளம்  பயிர்கள் அழுகும் நிலை தான் தொடர் கிறது.  ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டி தீர்த்து விடும். வடிகால் தூர் வாராததால் பயிர்கள் சேதம் அடைவது ஒவ்வொரு வருடமும் தொடர் கிறது. பருவமழை நீர் 100 டிஎம்சி அள வுக்கு கடலில் கலக்கிறது. மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க எந்த ஏற்பாடும் இல்லை. மேட்டூர் அணை 106 அடியாகும். நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியில் இருந்து 30 ஆயிரம்  கனஅடி வரை உள்ளது. ஆனாலும் தஞ்சையில் சம்பா  65 ஆயிரம் ஹெக்டர் அதாவது சரிபாதி தான் நடவு செய்யப்பட்டுள்ளது. காரணம் தண்ணீர் இருந்தும் வயல்களுக்கு செல்ல வில்லை. மழை நீர் வடியவும் செய்யாது. காரணம் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் காவிரி படுகை தூர்வார வேண்டும். தூர் வார 4 மாவட்டங்களுக்கும் அரசு ஒதுக் கீடு நிதி சுமார் 100 கோடி மட்டுமே. காவிரி டெல்டா முழுமையாக தூர்வாரி நவீனப் படுத்த சுமார் 10,000 கோடி தேவை என் ன்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். இந்த ஆண்டு சிறிய வாய்க்கால்களை கூட தூர்வார 100 நாள் வேலை பணியா ளர்களுக்கு அனுமதிப்பதில்லை. காவிரி டெல்டாவை முழுமையாக தூர்வாரி நவீனப்படுத்த வேண்டும். u100 நாள்  பணியாளர்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். uகொள்ளிடம் காவிரியில் தடுப்பணை கதவணைகளை ஏற்படுத்த வேண்டும். uமழை பாதிப்பிற்கு உடனடியாக நிவார ணம் வழங்க வேண்டும். சென்னையில் மழை பெய்து நீர் தேங்கினால் அரசு பதற்றப்படுகிறது. எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குரல் பலமாக வருகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் செல விடப்படுகிறது சரியானதே. டெல்டா மழை யில் மிதந்தால் அந்த குரல்கள் எங்கே போகின்றன? பாதிக்கப்படுபவர்கள் விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள். தஞ்சை கே.பக்கிரிசாமி,  மாநிலக் குழு உறுப்பினர், வி.தொ.சங்கம்