states

ஒடிசாவில் தொடரும் ரயில் விபத்துக்கள்; சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயிலில் தீ!

புவனேஸ்வர், ஜூன் 10 - ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம் பகானகா பஜார் ரயில் நிலையம் அருகே, ஜூன் 2-ஆம் தேதி இரவு 3 ரயில்கள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர்.  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்கு பின்னர், நாடு முழுவதுமே பல்வேறு மாநிலங்க ளில் ரயில்கள் தடம்புரள்வதும், விபத்துக்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, 288 பேர் பலியான துயரம்  நிகழ்ந்த, அதே ஒடிசாவில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், கடந்த திங்களன்று பார்கார் என்ற பகுதியில் தடம் புரண்டது. இதில், 5 பெட்டிகள் சேதமடைந்தன. செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து  புகை வெளியான சம்பவம், செவ்வா யன்று அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. புத னன்று இன்ஜின் இல்லாத சரக்கு ரயில் ஏறியதில், 7 தொழிலாளர்கள் ஒடிசாவில் உடல் நசுங்கிப் பலியாகினர். இந்நிலையில்தான்,

ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் துர்க் - பூரி விரைவு ரயில் சென்று கொண்டிருந்த போது ஏசி பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து, வெள்ளிக்கிழமையன்று பர பரப்பை ஏற்படுத்தியது.  இந்த ரயில் ஒடிசாவின் காரியார் சாலை ரயில் நிலையத்துக்கு இரவு 10.10 மணிக்கு வந்த போது, ரயிலில் இருந்த பி3 என்ற ஏசி பெட்டி யில் இருந்து புகை வந்துள்ளது. இதனை அறிந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வா கத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்த தீ அணைப்பான்களைக் கொண்டு தீ அணைக்கப் பட்டது. பிரேக் பேடுகளில் ஏற்பட்ட உராய்வால் தீ ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, சரக்கு ரயிலிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திலுள்ள ருப்சா ரயில்நிலையத்தில் கடந்த மூன்று நாள்களாக சரக்கு ரயில் நிறுத் தப்பட்டிருந்தது. நிலக்கரி இருந்த அந்த ரயிலில் இன்று காலை தீப்பற்றி புகை எழுந்துள்ளது. இதுதொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.