கவுகாத்தி, நவ.27- அசாம் எல்லையில் 6 பேர் கொல்லப் பட்டத்தை கண்டித்து மேகாலயாவில் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அசாம்-மேகாலயா எல்லையில் முக்ரோஹ் கிராமத்தில் அசாம் வனத்துறை யினர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இதனால் இரு தரப்புக் கும் ஏற்பட்ட மோதலில் ஒரு வனக் காவலர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் ஏற் பட்டது. இந்நிலையில், 6 பேர் கொலையை கண் டித்து மேகாலயாவில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் கான்ராட் சங்மா மோன் உள்ளிட்டோரின் உருவ பொம்மை களை எரித்தனர். சிலர் முதல்வரின் இல்லம் அமைந்துள்ள போலோ ஹில்ஸ் பகுதியில் முதல்வரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி னர். தொடர்ந்து மேகாலயாவில் பதற்ற மானச் சூழல் நிலவி வருகிறது.