states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிரிட்டனின் மிகப்பெரிய பிராட்பேண்ட் நிறுவன மான பிடி (BT) குழுமம் 2030க்குள் 55,000 ஊழி யர்களை (40%) நீக்குவ தாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பொரு ட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக பிடி  (BT) குழுமம் கூறியுள் ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில் நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle) 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக குறிப்பிட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர் வுக்கு விண்ணப்பிப்ப தற்கான கடைசி நாள் மே  23 வரை நீடிக்கப்பட்டுள் ளது. மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என  ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தக நிலை யில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வியாழ னன்று தேதி மாற்றம் செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் வழித் தடத்திற்காக சென்னை மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி ஆகஸ்ட் மாதம் தொடங் கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறி வித்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் நவீன சுரங்கம் தோண் டும் இயந்திரத்தின் சோதனை முயற்சி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.