- இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவி யை ராஜினாமா செய்தார். பொருளாதார கொள்கை கள் தோல்வி அடைந் ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இங்கி லாந்து வரலாற்றில் மிக குறுகிய காலம் (45 நாள்கள்) பிரதமர் பதவி யில் இருந்தவர் லிஸ் ட்ரஸ் என்பது குறிப்பிடத் தக்கது.
- சசிதரூர் தேர்தல் குழு வின் முன் ஒரு முகமும், ஊடகங்களுக்கு முன் மற்றொரு முகமும் காட்டு கிறார். அதாவது எங்கள் (மத்திய தேர்தல் ஆணை யம்) பதில்கள் அனைத்தி லும் திருப்தியடைந்தது போல ஒரு முகமும், திடீரென தேர்தலுக்கு எதிராக குற்றச்சாட்டு களை முன்வைத்த ஊட கங்களில் வேறு முகமும் இருந்தது என்று கூறு வதற்கு நான் வருந்து கிறேன் என காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணை யத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார்.
- மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடி யாக உயர்ந்துள்ளது.
- ஆசிரியர் தகுதித் தேர் வில் தகுதி பெறாதவர் கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்ற உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
- உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ஈரானின் ஆளில்லா விமானங்களைத் தாங்கள் பயன்படுத்தவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ‘‘நாங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களும் உள்நாட்டில் தயார் செய்யப்பட்டவை ஆகும்’’ என்றார். இந்நிலையில், உக்ரைனிலிருந்து ரஷ்யாவுடன் இணைந்த நான்கு பகுதிகளையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிறப்பித்துள்ளார்.
- செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள தங்கள் தலைமையகம் மீது நவீன நாஜிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யுகோஸ்லேவியாவின் புதிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் பஞ்சானக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே நவீன நாஜிக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். காவல்துறையும், நிர்வாகமும் அவர்கள் பக்கம் நிற்கிறார்கள். நாஜிக்களை எங்கள் கட்சி மிகவும் உறுதியாக எதிர்ப்பதால்தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.
- பிரிக்ஸ் அமைப்பில் சேரும் விருப்பத்தை சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் வெளிப்படுத்தி உள்ளதாக தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ரமஃபோசா அண்மையில் கூறினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வியாழனன்று கூறுகையில், பிரிக்ஸ் நாடுகள் இவ்வமைப்பின் விரிவாக்கத்தைத் தொடங்குவதற்கு சீனா ஆக்கமுடன் ஆதரவு அளிப்பதோடு, “பிரிக்ஸ்+” என்ற ஒத்துழைப்பை புதிய கட்டத்துக்கு முன்னேற்றி வருகிறது என்றார். மேலும், 16 ஆண்டுகள் வளர்ச்சியுடன், பிரிக்ஸ் நாட்டு ஒத்துழைப்பு செழுமையான சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றியுள்ளது. இதனால் தான், சர்வதேச சமூகத்தின் ஆதரவை பிரிக்ஸ் பெற்றுள்ளது என்றும் கூறினார்.