states

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்

சென்னை, அக்.13- அரசுப் பள்ளி மட்டுமின்றி மற்ற  பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ் ழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி காலை உணவுத்  திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008  பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை  பயிலும் 18 லட்சம் மாணவர்க ளுக்கு இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவு படுத்தினார். இந்த நிலையில் கடலோ ரத்தில் இருக்கும் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல் படுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளிகள் மட்டுமல்லாது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்று தமிழக  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிதிநிலை அறிக்கை யைப் பொறுத்து திட்டத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதி மன்ற மதுரை கிளை மனுவை முடித்து வைத்தது.