சூரத், ஜன. 23 - குஜராத்தின் சூரத் நகரில் நடிகர் ஷாருக் கானின் ‘பதான்’ திரைப்படத்துக்கு எதி ராக விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப் பினர் கலகத்தில் ஈடுபட்டனர். திரையரங்குக்கு வெளியே இருந்த பதான் திரைப்பட பேனர் களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில், ஜன வரி 25-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப் படம் ‘பதான்’. இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘பேஷரம் ரங்’ என்ற பாடலின் முன்னோட்டக் காட்சிகள், அண்மையில் வெளியானது. இந்நிலையில், அந்தப் பாடல் காட்சியில், தீபிகா படுகோனே காவி நிற நீச்சலுடை அணிந்திருப்பதாகவும், இது இந்துக்களின் மனத்தை புண்படுத்துவதாக வும் கூறி, சங்-பரிவாரங்கள் கொந்தளித்தன. மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற சபாநாயகர் கிரீஷ் கவுதம், மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா துவங்கி, ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங், சாமியாரிணியும் பாஜக எம்.பி. யுமான பிரக்யா சிங் தாக்குர், அயோத்தி அனுமன் காரி மடத்தின் சாமியார் ராஜு தாஸ், இந்து மகாசபை தேசியத் தலைவர் சக்கரபாணி மகாராஜ், பாஜக ஆதரவு எம்.பி. நவ்நீத் கவுர் ராணா என பலரும் ‘பதான்’ திரைப்படக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.
படக்குழுவினரை நாடு கடத்த வேண்டும் என்றதுடன், படத்தைத் திரையிட்டால், தியேட்டரையும், படத்தில் நடிப்பவர்களை யும் உயிரோடு எரிப்போம் என்று மிரட்டல் விடுத்தனர். இவர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ‘பேஷரம் ரங்’ பாடல் உள்பட பதான் திரைப் படத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு காட்சிகளில் திருத்தங்கள் செய்யுமாறு திரைப்பட தணிக்கை வாரியமே உத்தர விட்டது. இதுபோதாது என்று சாமியார்கள் கூட்டம் ஒன்று, “இந்த தர்ம சபையின் தணிக்கைக் குழு” என தனியாக ஒரு தணிக்கைக் குழு அமைத்து தாங்கள் அனு மதி தரும் படத்தை மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும் என்று அராஜகமாக அறிவித்தது. குஜராத்தின் சூரத் நகரில் பதான் திரைப் படம் வெளியாக இருக்கும் திரையரங்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை கூடிய விஎச்பி கூட்டத்தினர் அத்திரைப்படத்தின் போஸ்டர்களை கிழித்து வீசினர். அவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டதாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, 5 பேரை தற்போது கைது செய்தனா். மற்றொரு பாஜக ஆட்சி நடக்கும் மாநிலமான அசாமிலும் பதான் திரைப்படத்துக்கு எதிராக பஜ்ரங் தளம் அமைப்பினர் வன்முறை நடத்தியுள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் வஸ்திரா பூரில் இயங்கும் ‘ஆல்பா ஒன்’ என்ற தனியார் வணிக வளாகத்துடன் கூடிய தியேட்டரிலும், கடந்த வாரம் ‘பதான்’ திரைப் படத்தின் பிரமோஷன் போஸ்டர்களைக் கிழித்தெறிந்து ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ த்தின் அடியாள் படையாக விளங்கும் ‘பஜ்ரங் தள்’ அமைப்பினர் வெறியாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.