நாகைப்பட்டினம், ஜூன் 11- வேதாரண்யம் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கடலில்தத்தளித்த 4 மீனவர்கள் 5 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தி லிருந்து சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக் காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத் தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடினர். அப்போது அவ்வழியாக மீன்பிடித் துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதி யைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீன வர்கள் கடலில் தத்தளித்துக் கொண் டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்தி ரமாக கொண்டு வந்து சேர்த்தனர். மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதா ரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து வேதா ரண்யம் கடலோர காவல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.