ஈரோடு, ஜன.20- தேர்தல் அறிவித்த 24 மணி நேரத்தில் திரிபுராவில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்ப தாக கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வெள்ளியன்று செய்தி யாளர்களை சந்தித்த அவர் கூறுகை யில், ‘‘திரிபுராவில் பாஜக ஆட்சி அதி காரத்தில் இருக்கிறது. அங்கே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 12 மணி நேரத்திற்குள்ளாக ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. மார்க்சிஸ்ட், காங்கிரஸ், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் களும், தொண்டர்களும் தாக்கப்படு கிறார்கள். ஒருவர் கொல்லப்பட்டிருக் கிறார். வீடுகள் தீக்கிரையாக்கப்படு கின்றன. தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள் ளது. இது மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஈரோடு தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மிகக்குறைந்த வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக மக்களின் பேரன்பை பெற்று பணியாற்றியவர். அவரது திடீர் மறைவு சோகமானது, துயரமானது, குடும்பத்திற்கு மட்டுமல்ல தொகுதி மக்களுக்கே பேரிழப்பாகும். இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தோழமைக் கட்சிகளோடு பேசி காங்கிரசிற்கு ஒதுக்கியுள்ளார் அணியின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த அடிப்படையில் அறிவிக்கப்படும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் சிபிஐ மேற்கொள்ளும். எங்கள் அணி வேட்பா ளர் மகத்தான வெற்றி பெறுவார்’’ என்றார்.