சென்னை, அக். 19- சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கி றது. சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடி யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், கடந்த 5 ஆண்டு களில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்கள் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பிற பின்தங்கிய வகுப்பினருக்கு 15.92 சதவீதமும், எஸ்சி பிரிவினருக்கு 7.65 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 3.80 சதவீதமும் பிரதிநிதித்துவம் தரப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஐஏஎஸ் பணிக்கு மொத்தம் 2,163 பேரும், ஐபிஎஸ் பணிக்கு 1,403 பேரும் இந்திய வன பணிக்கு 799 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 334 எஸ்சி பிரிவினரும் , 166 எஸ்டி பிரிவினரும், 695 பிற பின்தங்கிய சமுதாயத்தினரும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்று பதில் அளித்தார். இந்த குறைவான பிரதிநிதித்துவம் சாதி அடிப்படையிலான மோசமான பாகுபாட்டை காட்டுகிறது. இந்த பாகுபாடு அவர்களை சமுதாயத்தில் உயர்வதைத் தடுக்கிறது. பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கான உரிமையை வழங்கா விட்டால் சமூக நீதி கனவு நிறைவேறாது. அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும். இதற்கு ஒரே வழி சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.