states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. திரிபுரா மக்கள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கத் தவறிய பாஜக அரசாங்கத்திற்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர். மக்கள் பிரச்சனை பற்றி பேசினால், திரிபுராவில் வகுப்புவாதப் பதற்றத்தைத் தூண்டி மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப பாஜக அரசு முயற்சிக்கிறது.  - சிபிஎம் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி
  2. தில்லியில் காற்று மாசுபாடு மீண்டும் தலைப்புச் செய்தியாக வலம் வருகிறது. தலைநகரின் சுற்றுச்சூழலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இயலாத ஒன்றிய அரசு, நாட்டின் மற்ற பகுதிகளை எப்படி பாதுகாக்கும்.- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
  3. குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்க ளைத் தயாரிப்பதற்கான டாடா தொழிற்சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வர வேண்டியது. ஆனால் குஜராத் மாநிலத்திற்கு மோடி கொண்டு சென்றுவிட்டார். மகாராஷ்டிரா எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறது என்பதற்கு இது முதன்மையான முன்னுதாரணம். -  சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
  4. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில், 95% தொகுதிகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீத முள்ள 5% தொகுதிகளுக்கு மிக மிக விரைவில் தொகுதி உடன்பாடு நிறைவ டையும். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்கும். -  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்