நாகப்பட்டினம், மே 27- நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முஸ்லிம் பெண் மருத்துவரை தரக்குறை வாக பேசி, ஹிஜாப்பை அகற்றக் கூறிய பாஜக நிர்வாகி புவனேஸ்வரராமை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்தால் வெள்ளிக்கிழமை இரவு புவனேஸ்வரராம் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் கடந்த புதன் கிழமை அன்று பணியில் இருந்த முஸ்லிம் பெண் மருத்துவரை அவரது உடை குறித்து பேசியும், வேலை பார்க்க விடாமல் தொந்த ரவு செய்தும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடக வலைதளங்களில் பரவி அதிர் வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து தலைமையில் திருப் பூண்டி மூலக்கடையில் புவனேஸ்வர ராமை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நெஞ்சு வலி காரணமாக திருப்பூண்டி அரசு மருத்துவமனையிலிருந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நாகப் பட்டினம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்ட பெ.சுப்ரமணி யன் என்பவர் வியாழனன்று இரவு உயிரி ழந்தார். நோயாளிக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தகராறு செய்து காலதாமதம் ஏற் படுத்தியதின் விளைவாக அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தலைமறைவாகியிருந்த பாஜக நிர்வாகி புவனேஸ்வர ராமை கைது செய்து நட வடிக்கை எடுக்கக்கோரி சனிக்கிழமையன்று அனைத்து ஒன்றியப் பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறை தலைமறைவாகி யிருந்த புவனேஸ்வர ராமை வெள்ளிக் கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.