states

img

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முஸ்லிம் வேட்பாளர்களை ஒதுக்கிய பாஜக

மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வழக்கம் போல பாஜக முஸ்லிம் வேட்பாளர்களை ஒதுக்கியுள்ளது. மேலும் மாநிலம் முழு வதும் உள்ள ஒட்டு மொத்த சட்டப்பே ரவை தொகுதிகளில்  10 சதவீத  முஸ்லிம் வேட்பாளர்களே போட்டியிடுவது தெரிய வந்துள்ளது.  வரும் நவம்பர் 20 அன்று மகாராஷ் டிர சட்டப்பேரவை தேர்தல் நடை பெற உள்ளது. மொத்தம் 288 உறுப்பி னர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு  4,136 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர். ஆனால் முஸ்லிம் வேட்பா ளர்கள் 420 பேர் தான் போட்டியில் உள்ள னர்.  இவர்களில் 50 சதவீதத்துக்கும்  மேற் பட்டோர் (218 பேர்) சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர். பிரதான கட்சியான காங்கிரஸ் 9 முஸ்லிம் வேட்பாளர்களையும் , பாஜக வின் கூட்டணிக் கட்சியான அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 5 முஸ்லிம் வேட்பாளர்களை யும் நிறுத்தியுள்ளன.   அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி  16 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத் தியுள்ளது.மேலும் சில சிறிய கட்சிகள் 150 முஸ்லிம் வேட்பாளர்களை  நிறுத்தி யுள்ளன. அவுரங்காபாத் தொகுதியில் போட்டியிடும் 29 பேரில் 17 பேர் முஸ்லிம் கள், அவர்களில் மூன்று பேர் பெண்கள். மகாராஷ்டிரா முழுவதும் முஸ்லிம் பெண் களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக உள்ளது. மொத்த முஸ்லிம் வேட்பாளர்க ளில் 22 பேர் மட்டுமே பெண்கள்.   தேர்தலுக்கான செலவு பெரும்பா லான நடுத்தர வர்க்க வேட்பாளர்களை குறிப்பாக சிறுபான்மையினரை பின் வாங்கச் செய்கிறது என  கூறப்படுகிறது என்றாலும் சங்பரிவார் முன்னெடுக்கும் மதவாத அரசியலின் தாக்கமும் இதன் பின்னணியில் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.