states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வரலாற்றின் மிக மோசமான அட்டூழியங்கள் படித்தவர்களால் செய்யப்பட்டதாம் பீகார் ஆளுநர் ஆரிப் கான் சர்ச்சை பேச்சு

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள கிராண்ட் சோழா உணவ கத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் “கல்விச் சிந்தனை அரங்கு 2025” இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பீகார் மாநில ஆளுநர் ஆரிப் கான் “இந்திய கல்வியில் ஒழுக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் பேசுகையில்,”மனித குலத்தின் தெய்வீகம் என்பது மதம், இனம், சிந்தனை என அனைத்து வேறு பாடுகளையும் ஏற்றுக்கொள்வது ஆகும். ஒழுக்கமின்மையால் மக்கள் விவேகம் இழந்து சீரழிய வாய்ப்புள் ளது. வரலாற்றில் மிக மோசமான அட்டூ ழியங்கள் படித்தவர்களால் செய்யப் பட்டவை” என அவர் சர்ச்சைக்குரிய வகையில் கூறினார்.

டாஸ்மாக் ஊழியர்களின்  போராட்டத்தை தடுப்பதா? : சிஐடியு கண்டனம்

சென்னை, ஜன. 28 - ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த முயன்ற டாஸ்மாக் ஊழியர்களை முன்னெச் சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது செய்ததற்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னத்தின் (சிஐடியு) பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணி நிரந்தரம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த காத்தி ருப்பு போராட்டத்தை தடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் பங்கேற்க வந்த ஊழி யர்களுக்கான வாகன உரிமையாளர்கள் மிரட்டப்பட்டதோடு, தொழிற்சங்க நிர்வாகி கள் வீடுகள், கடைகள் மற்றும் போராட்ட இடத்திற்கு வரும் வழிகளில் மறித்து கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் இந்த ஜன நாயக விரோத செயலை கண்டிப்பதாகவும், கைது செய்யப்பட்ட ஊழியர்களை உடன டியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுஜிசி வரைவு விதிகளுக்கு  எதிராக ஒரு வார போராட்டம் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் துவங்கினர்

சென்னை, ஜன. 28 - பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் - 2025ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் ஒரு வார கால தொடர் போராட்டங்களை அறி வித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும்,  உயர் கல்வியின் தரத்தை கேள்விக்குள்ளாக் கும் வகையிலும் அமைந்துள்ள யுஜிசி வரைவு அறிக்கைக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அமைப்பின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ் தெரிவித்துள்ளார். “ஜனவரி 28 அன்று அனைத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி வாயில்கள் முன் முழக்கப் போராட்டமும், ஜனவரி 30 அன்று சமூக ஊடகங்களில் போஸ்டர் பிரச்சார இயக்கமும், ஜனவரி 31 அன்று 100 மையங்க ளில் மக்கள் சந்திப்பு இயக்கமும் நடை பெறும். தொடர்ந்து, பிப்ரவரி 1 அன்று கும்பகோணத்தில் மாநில அளவிலான கருத்தரங்கம், பிப்ரவரி 2 அன்று வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இயக்கம், பிப்ரவரி 3-4 தேதிகளில் யுஜிசிக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கம் ஆகியவை நடைபெறும்” என்று சோ. சுரேஷ் கூறியுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ்  அமைப்புடன் தொடர்பா? ஒருவர் கைது

சென்னை, ஜன. 28 - தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-உடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி, சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அல்பாசிக்கை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த இவர், சென்னையில் 8 மாதங்க ளாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து கொண்டே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. செவ்வாயன்று அதிகாலை மாநிலம் முழுவதும் 16 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையின் போது அல்பாசிக் கைது செய்யப்பட்டார்.

தனுஷ் வழக்கில் நெட்பிளிக்ஸ் மனு தள்ளுபடி

சென்னை, ஜன. 28 - நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடி தான்’ படக்காட்சி கள் இடம்பெற்றதற்கு ரூ. 10 கோடி இழப்பீடு கோரி, தனுஷ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், தனுஷின் ‘வொண்டர்பார்’ நிறு வனம் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை பிப்ரவரி 5-ஆம் தேதி பட்டியலிட நீதிபதி உத்தர விட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்பதால் வழக்கை நிராக ரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் மனுத் தாக்கல் செய்தி ருந்த நிலையில், அந்த மனுவை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.