மாமல்லபுரம்,ஜன.25- சென்னையில் வரும் 31 மற்றும் பிப்.1, 2 தேதிகளில் ஜி 20 மாநாட்டு கருத்தரங்குகள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனே சியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்ன மெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 100 விருந்தி னர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின் றனர். இதைத் தொடர்ந்து, மாமல்ல புரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். அங்கு மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்கின்றனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு பிரதி நிதிகளின் உடல் நலம் மற்றும் பாது காப்பை கருத்தில் கொண்டு, மாமல்ல புரம் அருகில் உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து கலைச் ்சின்ன வளாகங்களில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அணுசக்தி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், கல்பாக்கம் அணு மின் நிலைய தொழில்நுட்பக் குழு வினர் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் இணைந்து, கடற்கரை கோயில் உட்பட புராதன சின்னங் களின் வளாகத்தில் கதிர்வீச்சு உள்ளதா என ஆய்வு செய்தனர். கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டு பிடிக்கும் ரேடார் கருவி மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசு மற்றும் மத்திய அணுசக்தி துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என அக்குழுவினர் தெரிவித்தனர்.