states

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,நவ.12- தென்மேற்கு வங்கக் கடல் பகுதி களின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடதமிழகத்தை, தெற்கு ஆந்திரா ஒட்டிய கடல் பகுதியில் நீடிப்பதால் புதன் மற்றும்  வியாழக்கிழமைகளில் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள் ளார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  புயலாக மாறுமா என்று கேட்டதற்கு, இது ஏற்கனவே, கடற்கரையை ஒட்டி நிலவி வருவதால், புயலாக வரு வதற்கு வாய்ப்பில்லை. அதே வேளையில், இது மிகவும் பலவீன மான மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பதால் அதே நிலையில், கரையைக் கடந்து செல்லும், இதனால் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களுக்கு மழை பெய்யும். இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். நவம்பர் 12 அன்று சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களி லும், மற்றும் தென் தமிழக கட லோர மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள் ளது என்று அறிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று காலை வரை 256 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 259 மி.மீ. எனவே, இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்துக! நவம்பர் 17 இல் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வலி யுறுத்தியுள்ளது. மேலும், கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதும் தயார்படுத்த வேண்டும் என்றும் அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.