தில்லி மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. காரவால் நகர் (அசோக் அகர்வால்) மற்றும் பதர்பூர் (ஜெகதீஷ் சந்த் சர்மா) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு தில்லி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மூலம் சிபிஎம் ஊழியர்கள் வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.