states

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டை அரங்கேற்றியது

சோனிபட், ஆக.3- 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக  மிகப்பெரிய முறைகேட்டை அரங்  கேற்றியதாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் 50 பக்க ஆய்வுக் கட்டுரை யை வெளியிட்டு கடும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளார். நாட்டின் முக்கிய தனியார் பல்க லைக்கழகங்களில் ஒன்றான அசோகா பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ளது. இந்த பல்க லைக்கழகத்தில் பணிபுரியும் பொருளா தார உதவிப் பேராசிரியரான சப்யசாச்சி  தாஸ் “உலகின் மிகப்பெரிய ஜனநாய கத்தில், ஜனநாயகப் பின்னடைவு” என்ற தலைப்பில் 50 பக்கம் கொண்ட  ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட் டார்.  இந்த ஆய்வு கட்டுரையில்,”2019 மக்  களவை தேர்தலில் காங்கிரஸ் - பாஜக இடையே வெற்றிக்காக கடுமையான போட்டி நிலவியது. ஆனால் காங்கி ரஸ் - பாஜக நெருக்கமாகப் போட்டி யிட்ட தொகுதிகளில், பாஜக விகிதாச் சார முறையில் ஆராய்ந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேற்றியுள்ளன. புரியும்படி சொன்னால் பாஜக வெற்றி  பெற்ற தொகுதிகளில் நிறைய தேர்தல் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய சிறு பான்மைக் குழுவான முஸ்லிம்களுக்கு எதிரான இலக்கு தேர்தல் பாகுபாட் டின் வடிவத்தை எடுக்கிறது. தேர்தல்  பார்வையாளர்களால் பலவீனமான கண்காணிப்பு, முடிவுகள், ஜனநாய கத்தின் எதிர்காலத்திற்கான கவலை யளிக்கும் வளர்ச்சியை முன்வைக்கின் றன. 2019-இல் பாஜகவின் வெற்றி என்  பது பூஜ்ஜியத்தின் மதிப்பில் ஒரு நிலை யான உயர்வைக் காட்டியுள்ள நிலை யில், வரும் தேர்தலில் பாஜக ஆளும்  மாநிலங்களில் இருந்து மாநில சிவில்  சர்வீஸ் அதிகாரிகள் அதிக வாக்காளர் களைக் கொண்ட தொகுதிகளில் குவிக்  கப்படலாம்” என கட்டுரையில் எச்ச ரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எச்சரிக்கை

அசோகா பல்கலைக்கழக பேராசிரி யரின் ஆய்வுக் கட்டுரை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது  டுவிட்டர் பக்கத்தில்,”இது “மிகவும் கவ லையளிக்கிறது”. இதில் கூறப்பட்ட கருத்துகளுக்கு விரிவான பதில்களை  வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை யும், ஒன்றிய அரசையும் வலியுறுத்து கிறேன். ஆய்வுக் கட்டுரை மூலம் முன்  வைக்கப்பட்ட ஆதாரங்களை ஒரு போதும் புறக்கணிக்க முடியாது” என்று  கூறியுள்ளார்.

பாஜக அலறல்

“இது இந்தியாவின் துடிப்பான தேர்  தல் செயல்முறையை இழிவுபடுத்தும் முயற்சியாகும். கொள்கை விஷயங்க ளில் பாஜகவுடன் கருத்து வேறுபாடு கொள்வது நல்லது அல்ல. அரை வேக்காட்டு ஆராய்ச்சி என்ற பெயரில் ஒருவர் இந்தியாவின் துடிப்பான கருத்  துக் கணிப்புச் செயல்முறையை எப்படி  இழிவுபடுத்த முடியும்? இதற்கு எந்த பல்கலைக்கழகமும் இப்படி ஆய்வை அனுமதிக்காது. இதற்கு நிச்சயம் சரி யான பதிலை பல்கலைக்கழகம் அளிக்க வேண்டும்” என டுவிட்டர் பக்  கத்தில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே  அலறியபடி பதிவிட்டுள்ளார்.

அசோகா பல்கலைக்கழகம் மழுப்பல்

இந்நிலையில், இந்த விவகாரம்  தொடர்பாக அசோகா பல்கலைக்கழ கம் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்”அசோகா பல்க லைக்கழகம் பல்வேறு துறைகளில் கற்  பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து  விளங்குகிறது. புகழ்பெற்ற பத்திரிகை களில் வெளியிடப்படும் இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எங்க ளது நிறுவனத்தில் பணியாற்றும் 160-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாண வர்கள் அனுமதி கேட்கும் பொழுது அதனை ஊக்கப்படுத்த மட்டுமே செய்கி றோம். பேராசிரியர்கள், மற்றும் மாண வர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வுக் கட்டுரை இன்னும் மறுஆய்விற்கு உட்  படுத்தப்பட்டுள்ளது. மேலும் எங்களது  கல்வி இதழிலும் இந்த ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் எதுவும் வெளி யிடப்படவில்லை. சமூக ஊடக செயல்  பாடு அல்லது பொது நடவடிக்கை களில் ஈடுபடும் தனிப்பட்ட ஆசிரியர்கள்,  மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி இது. இதற் கும், எங்களது கல்வி நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் இணை நிறு வனர்களான சஞ்சீவ் பிக்சந்தானி மற்  றும் ஆஷிஷ் தவான் ஆகியோர் மழுப்ப லாக தெரிவித்துள்ளனர்.