ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தென்காசி, நவ .16 ராஜபாளையம் முதல் புளி யரை வரை நான்கு வழிச் சாலைக்காக முப்பொழுதும் விளையக்கூடிய விவசாயி களின் நிலங்களை கையகப் படுத்துவதற்கு வருவாய் துறை நிர்வாகம் முயற்சி எடுத்தது. இதையடுத்து முப்போகம் விளையக்கூடிய விவசாயி களின் நிலங்களை நான்கு வழிச் சாலைக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் மாற்றுப் பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்றும் விவசாயி கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் மாற்றுப் பாதைக் கான விவசாயிகளின் அமைப்பை ஏற்படுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றோடு இணைந்து முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களில் நான்கு வழிச் சாலை அமைக்கக் கூடாது, மாற்று பாதையை உருவாக்கி நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார் ஜாஸ்பர் ஜெயராமன். இதனால் அவர் மீது மாவட்ட காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து குண்டர் சட்டத்தில் கைது செய்து அவரை சிறை யில் அடைத்தனர்
. குண்டர் சட்ட த்தில் சிறையில் அடைக்கப் பட்ட ஜாஸ்பர் ஜெயராமனை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ததோடு அவருக்கு அரசு நிர்வாகம் ரூபாய் 25000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை அடுத்து சிறையில் இருந்து விடுதலையாகி வீட்டிற்கு வந்தார் ஜெயராமன். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்ட குழு சார்பில் மாவட்டச் செய லாளர் உ. முத்து பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அசோக்ராஜ், வாசுதேவ நல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் மற்றும் கட்சி தோழர்கள், விவசாய சங்க தலைவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அடுத்து வரும் காலங்களில் விவசாயிகளின் முப்போகம் விளையக்கூடிய நிலங்களில் நான்கு வழிச் சாலைக்கான பாதை அமைப்ப தற்கு அனுமதிக்கக் கூடாது, மாற்றுப் பாதையில் நான்கு வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்போம். மீறினால் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம், விவசாயிகளை பாதுகாப்போம் என்று தலைவர்கள் கூறினர்.