சென்னை, ஏப்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மார்ச் 30, 31 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த இரு தினங்களாக சென்னை திரு வான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக் கட்டளையின், ருக்மணி தேவி கவின் கலை கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் போராடி வருகின்றனர். 2018 முதல் பாலியல் வன்கொடுமையை சந்தித்து வருவதாகவும், கல்லூரி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளா மல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்களான அரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகி யோர் பாலியல் துன்புறுத்தல் செய்து வரு வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஹைதராபாத்தில் நடந்த நிகழ்வுக்கு சென்னை மாணவிகளுக்கு பாதுகாப்பாக மேற்படி ஆசி ரியர்களை நிர்வாகம் அனுப்பியது என்ற தக வல், மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை கண்டு கொள்ளாதது மட்டுமல்ல உடந்தையாகவும் செயல்பட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே, மேற்படி குற்றச்சாட்டு சார்ந்த அம்சத்தில் நிர்வா கம் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை உருவாகவில்லை.
இந்த பின்னணியில் தமிழ்நாடு அரசு தலை யிட்டு மேற்படி 4 ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து, அவர்கள் மீது பாலியல் வன் கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை, பாலியல் ரீதியான துன்புறுத்தல் சார்ந்த குற்றச்சாட்டு அளித்த மாணவிகளிடம் பாலியல் வழக்குகள் குறித்த வழிகாட்டுதல்படி யான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்பிரச்சனை விவாதிக்கப்பட்டு மாநில முதல்வர் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருப் பது வரவேற்கத்தக்கது. அதேபோல், மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரில் சென்று விசாரித்ததும் சரியானதே. புகார் அளிக்க மாணவிகளிடம் உள்ள தயக்கம், மாண விகளின் எதிர்காலம் குறித்த அச்சம் சார்ந்தது. மாணவிகளின் சமூக உளவியல் பிரச்சனை களை புரிந்து கொண்டு காவல்துறை நிர்வா கம், அரசு, மகளிர் ஆணையம் உரிய வகையில் கையாள்வதும், குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் வேண்டுமென கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. வெள்ளி யன்று மாலை முதல் போராடும் மாணவி களுக்கு துணையாக சமூக மற்றும் உளவி யல் ரீதியில் உடனிருந்து போராடும் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந் திய மாணவர் சங்கம் அமைப்பினரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.
மனித உரிமை மீறல்: காவல்துறை அதிகாரி மீது குற்றவழக்கு பதிவு செய்க!
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்தி ரம் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர்களின் பல்லை பிடுங்கிய சம்பவம் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி யுள்ளது. குற்றவாளிகளா, இல்லையா என்ப தைத் தாண்டி காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டு தண்டனை வழங் கும் செயலானது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு உடனடியாக அவரை பணி யிடை நீக்கம் செய்திருப்பது வரவேற்கத்தக் கது. அதேசமயம் இந்த விசாரணை தயவு தாட்சண்யமின்றியும், உண்மையைக் கொண்டு வரும் வகையிலும் நடக்க வேண்டு மென்றால் இப்போது துணை ஆட்சியர் விசா ரிப்பார் என்பதை மாற்றி, இதைவிட உயர் பொறுப்பில் உள்ள ஒருவரை விசாரணை அதி காரியாக நியமிப்பது அவசியம். மேலும் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் திட்டமிட்டே இதை ஒரு நடைமுறையாகவும், ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் சட்டம் தனக்கு பொருந்தாது என்கிற ஆணவத்திலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதாக தெரிகிறது.
எனவே, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும். அதிகாரம் கையிலிருப்ப தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதும் அதிகாரிகளுக்கு இதுவே ஒரு எச்சரிக்கையாகவும், எதிர்காலத்தில் இத்த கைய செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் உதவும். பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மருத்து வம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு மருத்துவத்திற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். கடுமை யான மன உளைச்சலுக்கும், உடல் நோவுக்கும் ஆளாகியுள்ள இவர்களுக்கு அரசு இழப்பீடு தர வேண்டும். இந்த நடவடிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்து கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.