states

வழக்கறிஞர்கள் ஆவேசம்; அர்ஜூன் சம்பத் தப்பி ஓட்டம்!

சென்னை, டிச.6- டாக்டர் அம்பேத்கருக்கு காவி உடை  அணிவித்தும், திருநீறு பூசியும் போஸ்டர்  வெளியிட்ட இந்து மக்கள் கட்சித் தலை வர் அர்ஜூன் சம்பத், வழக்கறிஞர்களின் எதிர்ப்புக்கு பயந்து, சென்னை உயர் நீதி மன்றத்திலிருந்து தப்பி ஓடினார். இதனிடையே, அம்பேத்கர் மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி  கோரும் வழக்குக்காக அர்ஜூன் சம்பத்,  செவ்வாயன்று சென்னை உயர் நீதிமன்  றத்துக்கு வந்தார். அவர் வரும் தகவல்  கிடைத்ததும், சென்னை உயர் நீதிமன்றத்  தில் வழக்கறிஞர்கள் பெருந்திரளாக கூடி னர். சட்டமேதை அம்பேத்கருக்கு காவிச் சட்டை அணிந்து திருநீறு பூசுவதா? என்று கொந்தளித்த அவர்கள், அர்ஜூன்  சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அர்ஜூன் சம்பத் தனது ஆதர வாளர்களுடன் நீதிமன்றத்திற்குள் நுழை யவே, ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் அர்ஜூன் சம்பத்தை சுற்றிவளைத்தனர்.

இதனால் அர்ஜூன் சம்பத், வழக்கறிஞர்  களிடம் இருந்து தப்பி ஓடி, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். மண்டியிட்ட அர்ஜூன் சம்பத்  முன்னதாக அம்பேத்கர் மணிமண்ட பத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு அனு மதி கோரும் மனு சென்னை உயர் நீதி மன்றத்தில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, அர்ஜூன் சம்பத் உத்தரவாதக் கடிதம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “எந்த தனிப்பட்ட நபருக்கு எதி ராகவும் கோஷங்கள் எழுப்ப மாட்டோம், போக்குவரத்துக்கோ அல்லது பொது மக்களுக்கோ இடையூறு ஏற்படுத்த மாட்டோம். மேலும், அம்பேத்கரின் சிலைக்கு காவி உடை அணிவிக்கவோ, காவி துண்டு போடுவதோ அல்லது விபூதி மற்றும் குங்குமம் வைக்கவோ மாட்டேன்”  என்று கூறியுள்ளார். அர்ஜுன் சம்பத்தின் இந்த உறுதி மொழிக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட நீதி பதி சந்திரசேகர், அம்பேத்கர் மணி மண்ட பத்தில் அர்ஜுன் சம்பத் அஞ்சலி செலுத்துவதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி பட்டினம்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.