சென்னை, நவ.18- காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெறக்கூடும். அடுத்த மூன்று நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21 மற்றும் 22 ஆகிய தேதி களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல்வேறு மாவட்டங்க ளில் கனமழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒருசில இடங்க ளில் லேசான பனிமூட்டம் காணப்ப டும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதி களில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத் துள்ளது.