2011 சட்டப்பேரவை தேர்தலின் போதே இலவச மடிக்கணி னிக்கான அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளான திமுக, அதி முக குறிப்பிட்டு இருந்தன. அதன்படி, 2011 சட்டப்பேரவையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ஆம் ஆண்டு செப்டம் பர் 15 ஆம் தேதி லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தது. இதன்படி தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு முதல் லேப்டாப் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த 2011-12-ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெய லலிதா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பி டத்தக்கது. இதற்கு மாணவர்கள், பெற்றோர் கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பதை மறுக்க இயலாது. ஆரம்பத்தில் இத்திட்டத்துக்காக சுமார் ரூ.10,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்துவந்த 5 ஆண்டில் 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதனால் பயன டைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அதில் தொய்வு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டம் செயல்படாமல் முடங்கிப்போனது. அதேபோல் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கியது போக பல்வேறு மாவட்டங்களில் மிஞ்சியுள்ள லேப் டாப்புகள் இருப்பில் உள்ளதாக தெரியவருகி றது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்டாப்கள் பள்ளிகளில் இன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்க ளுக்கான பயிற்சி வழங்குவதற்கு கையி ருப்பில் உள்ள மடிக்கணினிகளை பயன் படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்தப் பின்னணியில் இதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம். நிதி நிலையை ஆராய்ந்து படிப்படியாக லேப்டாப் வழங்கும் திட்டம் தொடரப்படும் என அண்மை யில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரி வித்திருந்தார். ஆனால் மாணவர்கள் பலர் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வருகின்றனர். சில இடங்க ளில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நெடுங்குளம் பகுதியில் லேப்டாப் கேட்டு ஏற்கனவே மாணவர்கள் மறியல் போராட்டமும் நடத்தியுள்ளனர். இது போன்று மாநிலத்தின் வேறு சில பகுதிகளி லும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளி உட்பட விடுபட்ட பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப்களை வாங்கி வந்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவல த்தில் தனியாக இருப்பு வைத்து அந்த அறை சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிப்ப தோடு மாவட்ட அதிகாரிகள் உத்தரவு கொடுத் தால் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்க லாம் என்று கூறுகின்றனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளை கேட்கும் போது, இங்கு இருப்பு ஏதும் கிடையாது. மீத முள்ள மடிக்கணினி அனைத்தும் அந்தந்த பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர். இந்த முரண்பட்ட தகவல்களால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகை யில், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடந்து செயல்படுத்த வேண் டும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி மிகவும் அவசியம் என்கின்ற நிலை யில் அத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடா மல் செயல்படுத்துவதற்கு முதல்வர் முன் வர வேண்டும். மாநிலம் முழுவதும் பயன் படுத்தப்படாமல் இருப்பில் உள்ள லேப் டாப்களை மாணவர்களுக்கு வழங்க அந்தந்த மாவட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் இவர்கள். பயன்படுத்தப்படாமல் இருப்பில் உள்ள லேப்டாப்களை வீணாகாமல் உரிய முறை யில் மாணவர்களுக்கு உடனடியாக வழங்கி டும் வகையில் மாநில முதல்வரும்,கல்வித் துறை சார்ந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் மாணவர்களும்,பெற்றோர்களும் வரவேற்பார்கள்.
இந்நிலையில் லேப்டாப் உற்பத்திக்கு மிக முக்கியப் பொருளாக விளங்குவது லேப் டாப்பின் மூளை எனப்படுகின்ற அதன் (CPU) குறைகடத்திகள் ஆகும். கொரோனா கால கட்டத்தில் உலகளவில் பொதுமுடக்கம் ஏற் பட்டதன் காரணமாக குறைகடத்தி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின. தற்போது குறைகடத்திகளின் தேவை அதிகம் உள்ள நிலையில் கொரோனா காலக்கட்டத் தில் குறைகடத்திகளின் உற்பத்தி நிறுத்தப் பட்டதால் குறைகடத்திகளுக்கு உலகளவில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்க னவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவ னங்கள் இலவச லேப்டாப் வழங்குவதற்கான டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்ட வில்லை. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப் டாப்கள் வழங்கப்படாமல் உள்ளன. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப்புகளை பொறுத்தவரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் வாயிலாக டெண் டர்கள் கோரப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப் படுகின்றன. அந்த வகையில் குறைக்கடத்தி உற்பத்தி காரணமாக எல்காட் நிறுவனம் லேப் டாப் உற்பத்திக்காக டெண்டர் கோரிய போதி லும் லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் டெண் டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ஏற்கனவே லேப்டாப்புகள் வழங்காமல் நிலுவையில் உள்ள மாணவர்க ளுக்கும் நடப்புக் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் லேப் டாப்புகள் வழங்கப்படுமா என்கிற சந்தே கம் எழுந்துள்ளது. இலவச லேப்டாப்புகள் வழங்கப்படும் திட்டம் துவக்கப்பட்டதிலி ருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் பயன டைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடருமா, எஞ்சியுள்ள லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இத்தகைய திட்டத்தை அரசு உறுதியாக முன்னெடுத்தால் வாக்குறுதியும் நிறைவேற் றப்படும். மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதை தமிழக அரசு செய்திட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.
ஐ.வி.நாகராஜன்