states

முதல்வரின் துணிவான நடவடிக்கை: பேரவைத்தலைவர் அப்பாவு பாராட்டு

சென்னை, ஜன.11- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளு நர் உரையின் போது அசாதாரண சூழலை உருவாக்கியது அவையோ, அரசோ இல்லை” என்று சட்டப்பேர வைத்தலைவர் மு.அப்பாவு கூறினார். ஆளுநர் உரையாற்றிய போது பேரவையில் நிகழ்ந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி புதனன்று (ஜன.11) கேள்வி நேரம் முடிந்ததும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியதாவது:  பேரவைத் தலைவர் முன் நின்று எவ்வித கோஷங்களையும் எழுப்பக் கூடாது. இருந்தாலும், ஆளுநர் உரை யின் போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ, மதிமுக கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் வேல்முருகன், ஈஸ்வரன், ஜஹா ருல்லா உள்ளிட்டோர் ஒருபோதும் ஆளுநர் முன் நின்று களங்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்படி எந்த செயலையும் செய்யவில்லை என்றும் அந்த கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு எதிர்ப்பை தான் பதிவு செய்தனர். ஆளுநரின் கடமை என்ன? அமைச்சரவையின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டு முன்கூட்டியே ஆளுநரிடம் ஒப்புதல் வாங்கிய அந்த உரைக்கூட முழுமையாக படிக்கா மல் தவிர்த்தார். தனது சொந்த கருத்துக் களை புகுத்தினார். குளறுபடிகளை செய்தார். எதற்காக அவர் அப்படி செய்தார் என்பது தெரியவில்லை. முதலமைச்சரும் அமைச்சர்களும் கொடுக்கும் உரையை வாசிப்பதுதான் ஆளுநரின் பணி. அந்த அறிக்கைக் குள் என்ன இருக்கிறது?

 என்ன வர வேண்டும்? எது வரக்கூடாது? என்பதை  முடிவு செய்யும் அதிகாரம் ஆளு நருக்கு கிடையாது. அந்த மாண்பு களை ஆளுநர் காப்பாற்ற தவறி விட்டார். தனது கடமையில் இருந்து  விலகிவிட்டார். அரசு கொடுக்கும் அறிக்கையில் உள்ள குறை, நிறை களுக்கு முழுமையாக பொறுப் பேற்பது முதலமைச்சர்தான். எனவே, இந்த அசாதாரண சூழ்நிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிநுட்பத்தால் தான் சட்டமன்றத்தின் மாண்பு காக்கப்பட்டது. உடனடியாக என்னிடம் அனுமதி பெற்று விதிகளை தளர்த்தி கொண்டு வந்த தீர்மானம் தான் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் நடவடிக்கைகளுக்கு முன்னுதாரண மாக அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களின் மாண்பையும் முதலமைச்சர் காத்துள் ளார். தமிழ்நாடே முதலமைச்சரின் துணிவான நடவடிக்கையை பாராட்டி வருகிறது என்றும் கூறினார். எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை சட்டமன்றத்தில் பேரவைத் தலை வர் இருக்கை முன்பு நின்று முழக்க மிடக்கூடாது என்பது மரபு. எனவே,  ஆளுநர் உரையின்போது அதனை தவிர்த்திருக்க வேண்டும். எனவே வருங்காலத்தில் தவிர்க்கக்கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எதிர்ப்பை தெரிவித்துவிட்டு அதன் பின்னர் வெளிநடப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.