states

img

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

சென்னை,டிசம்பர்.02- வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகச் சென்னை, விழுப்புரம்,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தருமபுரி மாவட்டத்திற்குச் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.