பகவதி அம்மன் கோவிலுக்கு பெண் ஓதுவார் நியமனம்
நாகர்கோவில், ஏப். 6- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓதுவாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணிய ஓதுவார் 5 ஆண்டு களுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இத னால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தினமும் தீபாராதனை நடக் கும் 4 வேளைகளிலும் அம்மனை புகழ்ந்து பாடும் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை ஏற் பட்டது. எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு என்று தனியாக ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக் தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி திரு வானைக்காவு திருமலை சிவா உய்ய கொண்டான் கோவிலில் கடந்த 10 ஆண்டு களாக ஓதுவராக பணியாற்றி வந்த பிர சன்னா தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்
சென்னை,ஏப்.6- திருச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த 10 லட்சம் சதுர அடியில் ரூ.600 கோடி மதிப்பீட் டில் தகவல் தொழில்நுட்ப (டைடல் பார்க்) பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (ஏப்.6) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் பதிலளித்து பேசிய அமைச்சர், சென்னை அருகே ஆவடி டைடல் பார்க் அமைக்கும் பணி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் தொழில் பூங்காக்கள் அமைக் கப்படும்”என்றார். சீனாவில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030 ஆண்டிற்குள் 23 லட்சம் கோடி ரூபாய்க்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதுடன் 45 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான பணிகளை தொடர் நடவடிக்கை யாக அரசு செய்து வருகிறது என்றார்.
காட்பாடி, மதுரை மாட்டுத்தாவணியில் தொழிற்பூங்கா
காட்பாடி வெடிமருந்து ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தில் சிப்காட் சார்பில் ஒரு தொழிற் பூங்கா முன்னுரிமை அடிப்படையில் இந்த ஆண்டு அமைத்து கொடுக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக தொழிற் சாலைகளை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி ஊக்கப்படுத்த நாங்குநேரியில் தொழிற் பூங்கா அமைக்கும் பணி நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மேற்கொள்ளப் படும். மதுரை மாட்டு தாவணி உள்ளிட்ட தொழில் வளர்ச்சி பின்தங்கிய பல்வேறு பகுதிகளிலும் தொழில் பூங்காக்கள் அமைத்து கொடுக்கப்படும். காஞ்சிபுரம் வட்டம், வையாவூரில் நலிவடைந்த காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலத்தில் சுமார் 1,800 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ரூ.38.70 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். டைசல் உயிரியின் முகவரி என்ற பெயரில் டைசல் புத்தாக்க மையம் சுமார் ரூ.10 கோடியில் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் அமைக்கப்படும். மணப்பாறை, தேனி, திண்டிவனம் மற்றும் சூளகிரி சிப்காட்டின் 4 புதிய தொழிற் பூங்காக்களில் ரூ.5 கோடியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்றும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
மன்னார்குடிக்கு கடன் பட்ட பள்ளிக்கல்வித்துறை!
சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது மன்னார்குடி திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா,”25 ஆண்டுகளுக்கு முன்பு மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் அரசு பெண்கள் பள்ளி அமைப்பதற்கு இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 593 சதுர அடி நிலம் வழங்கியது. இதற்காக ஒரு கோடியே 25 லட்சத்து 86 ஆயிரத்து 670 ரூபாய் பள்ளிக்கல்வித்துறை தர வேண்டும். ஆனாலும் தற்போது வரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், மன்னார்குடி நகராட்சிக்கு கடன் பட்டதாகவே இருந்து வரும் பள்ளிக்கல்வித்துறை அந்த தொகையை எப்போது விடுவிக்கும் என்றார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “எங்கள் துறைக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டிய பாக்கியிருக்கிறது. அதை கழித்துக் கொண்டு நகராட்சி மூலம் மீதித் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பதவியேற்பு
சென்னை,ஏப். 6- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி யாக தேவராஜ் நாகார்ஜூன் பதவி யேற்றார். அவருக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதியுடன் சேர்த்து உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள் ளது. இதை அடுத்து புதிய நீதிபதியை வரவேற்று அரசு தலைமை வழக்கறி ஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலை வர் பி. எஸ். அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சகர்களுக்கு பேரவை இரங்கல்
சென்னை,ஏப்.6- செங்கல்பட்டு மாவட்டம், மூவர சம்பட்டு கோயில் குளத்தில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, நீரில் மூழ்கி உயிரிழந்த 5 இளம் அர்ச்சகர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும் பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப் படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் வியாழனன்று (ஏப்.6) காலை 10 மணிக்கு கூடியதும், இரங்கல் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. அதனைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தீர்த்தவாரி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விளக்கம்
சென்னை,ஏப்.6- சென்னையை அடுத்த நங்க நல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள பழமையான தர்மலிங் கேஸ்வரர் கோவிலில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 5 பேர் பலியானார்கள். ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் பரிதாப மாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்ட சபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு நிவாரணத்தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கவும் அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானத்திற்கு இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து கூறியதாவது:- “தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோவில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி நடத்துவது குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குளத்தை தூர்வாராமல் தீர்த்தவாரி நடை பெற்றது குறித்து முதலமைச்சர் என்னை கண்டித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார்.