சென்னை,பிப்.14- தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று மக்கள் மேடை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர்கள் பேரா.அருணன் மற்றும் க.உதயகுமார் ஆகியோர் விடுத் திருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக் குள் சென்று அவர்களுக்கு எதிரான படுமோசமான கோஷங்களை எழுப்புகிறார்கள். கூட்டாக வழிபாடு செய்யும் கிறிஸ்தவர்களோடு தகராறு செய்கிறார்கள். இந்த அமைப்பு வன்முறையில் நம்பிக்கையுள்ள அமைப்பு என்பதை அது நடத்தும் ஷாகாக்கள் எனப்பட்டவை தக்க சாட்சியங்களாகும். அதனால்தான் ஆர்எஸ்எஸ்சின் ஊர்வலங்களுக்கு அனுமதி தர மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. கெடுவாய்ப்பாக, அவற்றுக்கு அனுமதி தந்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். கேட்டால் பேச்சுரிமை என்கிறது. வன்முறையில் கெடுப்பதும், பலாத் காரத்தை தூண்டுவதும் எப்படி பேச்சுரிமைக்குள் வரும்? ஆர்எஸ்எஸ் கேட்கும் வழித் தடத்தில் மசூதிகளும் முஸ்லிம்கள் வாழும் இடங்களும் உள்ளன. இதனால் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது எனும் காவல்துறையின் கருத்தை நீதிமன்றம் புறந்தள்ளியிருப்பது நியாயமற்றது. ஏதேனும் கலவரம் நடந்தால் நீதிமன்றம் பொறுப் பேற்குமா? தமிழ்நாடு அரசை நோக்கியே குற்றச்சாட்டு நீளும். எனவே உயர்நீதிமன்றத்தின் இந்தத் தவறான தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. மதப் பதட்டம் ஏற்படாமல் தடுத்து, மக்கள் ஒற்றுமையைப் காக்க வேண்டியதும், சட்டம் ஒழுங்கைக் பாதுகாக்க வேண்டியதும் தமிழ்நாடு அரசின் பொறுப்பாகும். எனவே, தாமதமின்றி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.