அரசியலில் இருந்து விலகுவதாக இதுவரை ஆயிரம் முறை அறிவித்துவிட்டு, மீண்டும் மீண்டும் அரசியல் கட்சி ஆரம்பித்துக் கொண்டிருப்பவர் தமிழ ருவி மணியன். ஏற்கனவே காந்திய மக்கள் இயக்கம் என்றும் காந்தி காமராஜ் மக்கள் கட்சி என்றும் வைத்திருந்தவர். அவருக்கே மன சாட்சி உறுத்த காந்தியை நைசாக கழற்றி விட்டு தற்போது காமராஜர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்துகிறார். அரசியலுக்கு வரச்சொல்லி ரஜினியை கொலை விரட்டாக விரட்டியவர்களில் இவரும் ஒருவர். குருமூர்த்தியும் இவரும் சேர்ந்து குழி வெட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் தப்பித்து விட்டார். தற்போது, தனிக் கச்சேரி நடத்துவது போல காட்டிக் கொண்டு பாஜகவுக்கு பக்க வாத்தியம் வாசித்து வருகிறார்.
கோவைக்கு போன அவர், செய்தி யாளர்களைச் சந்தித்து தனது சில்லரை சிந்த னைகளை சிதற விட்டிருக்கிறார். அந்த முத்துக் களில் ஒன்று, திராவிட கட்சிகள் வெறுப்பு அர சியலை வளர்க்கின்றன என்பது. குஜராத்தில் வெறுப்பு அரசியலை நரேந்திர மோடியும் அமித்ஷாவும் எவ்வாறு வளர்த்தார்கள் என் பதை பிபிசி ஆவணப்படம் அம்பலப்படுத்தி யுள்ளது. ஆனால் அதை தடை செய்துவிட்ட னர். வெறுப்பு அரசியலின் மொத்த குத்தகை யாளர்களாக பாஜக இருக்க, அதில் யாரும் பங்கு கேட்டு வந்துவிடக்கூடாது என பதறுகிறார் போலும் மணியனார். தமிழ்நாடு என்று இருப்பதை தமிழகம் என மாற்றலாம் என உளறிக் கொட்டியதால் வாங்கிக் கட்டிக்கொண்ட ஆளுநரே நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று ஜகா வாங்கிய பிறகும், இவர் விடாமல் தமிழக அரசு, தமிழக முதல்வர் என்றுதான் அண்ணா ஆட்சிக் காலத்திலேயே இருந்துள்ளது என ஆளுநரின் அபத்தத்திற்கு பொழிப்புரை எழுதி யிருக்கிறார்.
ஆட்சியில் இருப்பவர்கள் கவர்னருடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என்றும், இவர்கள் எழுதிக் கொடுத்ததையெல்லாம் சட்ட சபையில் அப்படியே வாசிக்க கவர்னர் ஒன்றும் கிளிப்பிள்ளை இல்லை என்றும் ஆளுநருக்கு முரட்டு முட்டுக் கொடுத்திருக்கிறார். மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசும் அதனுடைய தலைவரும்தான் முதன்மையான வர்களேயன்றி நியமனப் பத்திரம் பெற்று வந்த வர்கள் தலைமகனாக முடியாது. இன்னமும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து மணியனார் மீண்டு வரவில்லை போலிருக்கிறது. ஆளுநரோடு இணக்கமாக இருக்க வேண் டும் என்று தர்ம உபதேசம் செய்யும் தமிழருவி யார் மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் சண்டித்த னம் செய்யும் ஆளுநரைப் பற்றி ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. ஆன்-லைன் சூதாட்டம் ஒழிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடிப்பதால், 60-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன. ஆனால், ஆளுநர் சூதாட்டக் கம்பெனி உரிமையாளர்களை அழைத்து குலாவுகிறார். ஒரு காலத்தில், தன்னை காந்தியவாதி என்றும், காந்தியத்தின் கடைசி நம்பிக்கை தாம்தான் என்றும் சொல்லிக் கொண்டவர், ஆளுநரின் இந்தச் செயலை எப்படி நியாயப்படுத்துவார்?
ஆளுநர் மாநில அரசு எழுதிக் கொடுத்த தைத்தான் பேச வேண்டும். அவர் சொந்தமாகப் பேச விரும்பினால், தனி ஆளாய் தவிக்கும் தமிழருவி மணியனோடு சேர்ந்து காமராஜர் மக்கள் கட்சியில் சேர்ந்து, நினைத்ததை யெல்லாம் பேசலாம். இன்னொரு நபர் வந்தால், மணியனாருக்கும் கொஞ்சம் தெம்பாக இருக்கும். ஆளுநரை யாரும் கிளிப்பிள்ளை யாக இருக்க வேண்டும் என்று கூறவில்லை; ஆர்எஸ்எஸ் அமைப்பின் புலிப் பல்லை பொருத்திக் கொண்டு அரசியல் சட்ட மாண்பு களை கடித்துக் குதற வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள். விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டி ருப்பதால், அடுத்து வரும் தேர்தலிலும் மோடி ஆட்சிதான் வரும் என்று சாபம் கொடுக்கிறார் இந்த நவீன துர்வாசர். உலக அரங்கில் இன்று மதிப்புமிக்க நாடாக இந்தியாவை மோடி மாற்றி யிருப்பதாகவும், மணியனார் மணி அடித்தி ருக்கிறார். எத்தனை உலக நாடுகளை சுற்றி வந்து இதை கண்டுபிடித்தாரோ தெரிய வில்லை. ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் மெய் உண்டாகும்’ என்பார் மகாகவி பாரதி. உள்ளத்தில் கள்ளத்தையும் பெரும் பள்ளத்தையும் புதைத்து வைத்தி ருக்கும் இவர், குறைந்தபட்சம் தமிழருவி என்ற பெயரை பெருந்தன்மையோடு விட்டு விட்டு ஆர்எஸ்எஸ் மணி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம். தமிழ்கூறும் அறமாவது பிழைத்துப் போகும்.