ஷில்லாங், ஜன. 10 - பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார். மேகாலயாவில் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய மேகா லயா அரசின் பதவிக் காலம் 2023 மார்ச் 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், 60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையிலேயே, பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க மாட்டோம் என்று மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கான்ராட் சங்மா, செய்தி யாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள் ளார். அதில், “ஒரு அரசியல் கட்சியாக, பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) என்பதை தேசிய மக்கள் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். சட்டம் மேகாலயா மக்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கக்கூடாது.
சில பகுதிகளில் சில விஷயங்களை செய்ய ஒன்றிய அரசு விரும்புகிறது. ஆனால் அவை நமக்கு தெரியாத விஷயங்கள். குழந்தைகளுக்கு சொத்து எப்படி மாற்றப்படும் என்பதையும் பொது சிவில் சட்டம் வரையறுக்கும். எனவே நாட்டின் பிற பகுதிகளில் செய்வது போல் மூத்த மகனுக்கு செல்ல வேண்டும் என்று பொது சிவில் சட்டம் கூறினால், பல பழங்குடியினரில் இளைய மக ளுக்கு நாம் சொத்து கொடுக்கும் மாநில கலாச்சாரத்துடன் அது செல்லாது. பொது சிவில் சட்டத்தின் முழுக் கருத்தும் மேகாலயா மாநிலத்தின் கலாச்சார நடைமுறைகளை மாற்றியமைக்க முடிந்தால், அதனை ஒரு மாநிலமாகவும், ஒரு கட்சியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார். கடந்த மாதம், ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட மசோதாவை தனிநபர் மசோதாவாக நாடா ளுமன்ற மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.