states

ரயிலில் முதிய பயணியிடம் பாஜகவின் நாராயணன் திருப்பதியின் அராஜகம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடும் கண்டனம்

சென்னை, பிப்.23-  கோவை சதாப்தி ரயிலில் ஈரோட்டைச் சேர்ந்த முதிய பயணி ஒருவரிடம் பாஜக வின் ஊடகத் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அராஜகமாக நடந்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செய லாளர் சாமுவேல் ராஜிடமும் அநாகரிக மான முறையில் நடந்து கொண்டார். இச்செய லில் ஈடுபட்ட பாஜக நாராயணன் திருப்பதி யை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.  இதுகுறித்து  தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: நாராயணன் திருப்பதி சதாப்தி ரயிலில் நடந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள காணொலி, முழு உண்மையை திட்டமிட்டு மறைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி யை சாமுவேல்ராஜ் கடுமையான வார்த்தை களில் விமர்சித்தார் என்றும், தான் தலையிட்டு வருத்தம் தெரிவிக்க வைத்ததாகவும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது. எங்கே பிரச்சனை துவங்கியது, எதற்காக சாமுவேல்ராஜ் விமர்சனம் செய்தார், நாராயணன் திருப்பதியும் சாமுவேல்ராஜ் இருவரையும் தவிர வேறு யாரும் சம்ப வத்தில் இல்லையா என்பதெல்லாம் அந்த  காணொலியில் இல்லை. சொந்தக் கட்சிக்கா ரர்களிடமே “காணொலி” அரசியலை நடத்தி எப்படியெல்லாம் தலைகளை உருட்டுகி றார்கள் பாஜகவினர் என்பதை நாடறியும். சதாப்தி ரயில் சம்பவத்திலும் வெட்டிச் சுருக்  கப்பட்ட காணொலியை நாராயணன் திருப்பதி சுற்றுக்கு விட்டுள்ளார். உண்மை யில், காவலர்கள் தலையிட்டு இரண்டு தரப்  பும் முடித்துக்கொள்வது என்ற அடிப்படை யில் இரு தரப்பும் வருத்தம் தெரிவித்ததை  மறைத்து, அந்த காட்சிகளை மறைத்து ஏறத்  தாழ இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு பிரச்சனையை பற்றி இரண்டு நிமிட காணொ லியாக்கி பதிவிட்டு வழக்கம் போல் திரித்திருக்கிறார்.

ரயிலின் வசதி குறித்து  முதிய பயணி குமுறல்

உண்மையில் சதாப்தி ரயிலில் நடந்தது  என்ன? முதிய பயணி ஒருவர் ரயிலின் வசதி கள் பற்றிய தனது குமுறல்களை வெளிப்  படுத்தியதில்தான் பிரச்சனை துவங்கியுள் ளது. இயல்பாக குறைபாடுகளை பேசும்  போது அரசாங்கத்தின் செயல்பாடுகள் எப்படி விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக் கும்? “எல்லாமே பிரதமரின் கைகளில்” என்று  இயங்கும் அரசாங்கம் இது எனும் போது  பிரதமரின் மீது விமர்சனம் எப்படி இல்லாமல்  இருக்க முடியும்? “அமிர்த காலம்” இது என  ஆட்சியாளர்கள் கூறுகையில், அமிர்தம்  கசக்கிறது என்று சொல்லுகிற உரிமை சாதா ரண மக்களுக்கு கிடையாதா? மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விமர்சனத் திற்கு அப்பாற்பட்டவர்களா? 

முதியவரை நாராயணன் மிரட்டியதற்கு பயணிகளே சாட்சியம்

இத்தகைய விமர்சனத்தையே அந்த முதிய பயணி செய்தார். அதற்கு ஜன நாயக உணர்வோடு மறுமொழி  ஆற்ற வேண்டிய நாராயணன் திருப்பதி அந்த முதிய பயணிக்கு தந்த பதில் “நான் யார் தெரி யுமா? தூக்கிடுவேன்”. இப்படி அவர் கத்திய தற்கு அந்த ரயில் பெட்டியில் பயணித்த எல்லோருமே சாட்சியம். நாராயணன் திருப்பதி ரயில்வே போர்டு உறுப்பினர் என்ற  உண்மை. இது காலம் வரை எந்த ரயில்வே  துறை முன்னேற்றம் மூலமும் நமக்கு தெரிய வரவில்லை. ஒரு முதிய பயணியை “தூக்கிடு வேன்” என்று ஆணவமாக மிரட்டியதன் வாயி லாகவே அவர் ரயில்வே போர்டு உறுப்பினர் என்பது பொது வெளியின் கவனத்திற்கு வந்துள்ளது.  பிரச்சனை அடிப்படையில், நாராய ணன் திருப்பதிக்கும் அந்த முதிய பயணிக்  கும்தான். நிலை குலைந்து போய் அமர்ந்தி ருந்த அந்த முதியவரை பார்த்து திரும்ப திரும்ப “தூக்கிடுவேன்” என்று கத்திய நாரா யணன் திருப்பதி  மிரட்டியதைத் தட்டிக் கேட்  கவே சாமுவேல் ராஜ் தலையிட்டுள்ளார். “தூக்கிடுவேன்” என்றால் கொலை மிரட்டல்  இல்லையா என்று கேட்டுள்ளார். நாராய ணன் திருப்பதி ஆணவமாக தொடர்ந்து பேசியதே வாக்குவாதம் நீண்டதற்கு கார ணம். காவல்துறை தலையீடு வரை போயி ருக்கிறது. காட்பாடியில் பா. ஜ.க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பயணிகள் அல்லாத 10 பேர் வண்டிக்குள் வந்தது எப்படி? ஏன்  காவல்துறை சாமுவேல்ராஜை மட்டும் ரயிலை விட்டு இறங்குமாறு நிர்ப்பந்தித்தது? முதிய பயணியை “தூக்கிடுவேன்” என்று முதியவர் ஒருவரை மிரட்டிய நாராயணன் திருப்பதி மீது என்ன நடவடிக்கை?  ரயிலை விட்டு இறங்கிய சாமுவேல் ராஜிடம்  உடன் வந்த பயணிகள் பாராட்டு தெரி வித்ததும்,  தனக்காக வாதாடி துணை நின்ற தற்காக  முதிய பயணி கண்ணீர் மல்க நன்றி  தெரிவித்ததும் சாமுவேல்ராஜின் அறச் சீற்றத்திற்கான சாட்சியங்கள். 

அராஜகத்திற்கு துணைபோன ரயில்வே காவல்துறை

நாராயணன் திருப்பதியின் அராஜ கத்தையும், முதிய பயணியை மிரட்டிய நாரா யணன் மீது நடவடிக்கை எடுக்காமலும் காட்  பாடியில் பயணிகள் அல்லாத 10 பேரை ரயிலுக்குள் அத்துமீற விட்டதுமான ரயில்வே காவல் துறையின் அணுகுமுறையையும், அரசின் செயல்களை விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்க முனையும் பாஜக நட வடிக்கைகளையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கி றது. நாராயணன் திருப்பதியின் அராஜ கத்தை, அவருக்கு துணைபோயுள்ள ரயில்வே காவல் துறையை கண்டித்து குரல்  எழுப்புமாறு ஜனநாயகத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.