சண்டிகர், மே 12 - பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்பை கேட்க வராத பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்க்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அபராதமும் தண்டனையும் விதிப்பது தொடர்கதையாகி இருக்கிறது. உத்தரகண்ட்டில் பள்ளி மாணவர் களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது சண்டிகரில் மாண வியருக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந் திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ ஏப்ரல் 30 அன்று 100 எபிசோட் களை நிறைவு செய்தது. அந்த வகை யில், 100-ஆவது எபிசோட் என்பதால், இதனை பெரிய அளவிற்கு விளம்பரப் படுத்தும் வகையில், நாடு முழுவதும் பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதனொரு பகுதியாக, டேராடூனில் உள்ள ஜிஆர்டி நிரஞ்சன்பூர் அகாடமியிலும் பிரதமரின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்பப்பட்டது. ஆனால், இதில் மாணவர்கள் பலர் கலந்துகொள்ளாத நிலையில் அவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒருவேளை அன்றைய தினம் உடல் நிலை சரியில்லாமல் போயிருந்தால், அதற்கான மருத்துவச் சான்றிதழோடு பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. இது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில்தான், சண்டி கரிலுள்ள பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையமும் (Post Graduate Institute of Medical Education & Research - PGIMER) நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ ஒலிபரப்பைக் கேட்காத 8 முதலாம் ஆண்டு மாணவியர், 28 மூன்றாமாண்டு மாணவியர் என நர்சிங் மாணவியர் 36 பேரை, ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியில் இருந்து வெளியே செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள் ளது. இதுதொடர்பான செய்திகள் வெளி யான நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியை நான் இது வரை கேட்டதே இல்லை. ஒருமுறை கூட கேட்கவில்லை. இனி கேட்கப் போவது மில்லை. எனக்கும் தண்டனை வழங்கப் படுமா? என் வீட்டிலிருந்து வெளி யேறுவதற்கு தடைவிதிக்கப்படுமா? இப்போது கவலையாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், இது பெரிய அளவில் ஊதிப் பெரிதாக்கப்படு வதாகவும் பிஜிமர் நிர்வாகம் தெரி வித்துள்ளது.