states

பொய்யும் புரட்டுமாக ஒரு தேர்தல் உரை!

புதுதில்லி, ஆக. 16 - “பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை, பல்வேறு பொய்கள், திரிபுகள், மிகைப்படுத்துதல்கள், தெளிவற்ற வாக்குறுதிகள் நிரம்பிய மோசமான தேர்தல் உரை” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டின் 77-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங் கோட்டையில் பிரதமர் மோடி செவ் வாய்க்கிழமை தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார். இந்த உரையை விமர்சித்து காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், அவர் கூறி யிருப்பதாவது: “சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் கருத்துகளை தெரிவிக்கவோ, நாடு கடந்து வந்த பயணத்தை கொண்டாட வோ, நாட்டின் முன் உள்ள சவால் களை ஏற்கவோ செய்யாமல் பிரத மர் மோடி சுயபெருமை பேசியுள் ளார். சுருக்கமாக சொல்ல வேண்டு மானால், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தோல்விகளை, ‘மோசமான கொள்கைகள், அநீதி, தவறான உள்நோக்கங்கள்’ என 3 பிரிவுகளில் வகைப்படுத்தலாம். ஒட்டுமொத்த தேசத்துக்கும் நிரூப ணம் ஆகியுள்ள இந்த உண்மையை இனி வாய்வார்த்தைகளாலும் வெற்று முழக்கங்களாலும் மறைக்க முடியாது. மணிப்பூர் போர்க் களமாக மாற  வழிவகுத்த தனது அரசின் தோல்வி களை அவர் ஒப்புக் கொள்ளவோ அல்லது அதுகுறித்து வருத்தம் தெரி விக்கவோ இல்லை. மணிப்பூரில் பெண்கள் கொடூர வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை ஒட்டுமொத்த தேசமும் கண்டது. ஆனால், ‘அமிர்த  காலத்தில்’ பாரத மாதா புத்துயிர் பெறு வதாக பிரதமர் மோடி வெட்கமின்றி கூறுகிறார்.

கொரோனா பரவல் காலகட்டத் தில் இந்தியாவின் திறனை உலகம் பார்த்ததாக பிரதமர் குறிப்பிட் டுள்ளார். போதுமான ஆக்சிஜன் விநியோகம் இல்லாதது மற்றும் சரியான நேரத்துக்குள் போதிய தடுப்பூசிகள் பெறுவதில் ஏற்பட்ட தோல்வி ஆகிய காரணங்களால், உலகிலேயே அதிகமாக இந்தியாவில் சுமார் 40 லட்சம் உயிரிழப்புகள் நேரிட்டன என்ற உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலை தனது உரையில் குறிப்பிட பிரதமர் மோடி தவறிவிட்டார். கொரோனா இரண்டாவது அலை யில் மருத்துவமனைகளுக்கு வெளியே உயிரற்ற உடல்கள் குவிந்து கிடந்ததையும், கங்கையில் ஏராள மான பிணங்கள் மிதந்ததையும் உலகம் மறக்கவில்லை. கிழக்கு லடாக்கின் டேப்சாங் மற்றும் டெம்சோக்கில் 2000 சதுர கிமீ தொலைவுக்கு இந்தியப் பகுதிக்குள் ஊடுருவிய சீன துருப்புகள், இந்தியப் படையினரை நுழையவிடாமல் 3 ஆண்டுகளாக தடுத்து வரும் நிலை யில், ‘நாட்டின் எல்லைகள் முன்பை விட இப்போது பாதுகாப்பாக இருக் கிறது’ என பிரதமர் கூறுவதற்கு உண்மையிலேயே (!) ஒரு தைரியம் வேண்டும். மக்கள்தொகை வளம், ஜனநாய கம், பன்முகத்தன்மை ஆகிய 3 அம் சங்களும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், இந்த மூன்று அம்சங்களிலும் அவரது அரசு தோல்வியடைந்துவிட்டது என்பது தான் உண்மை.

நாட்டில் படித்த இளைஞர்களில் நான்கில் ஒருவர் வேலையின்றி உள்ளனர். மற்றவர்களும் உரிய  வேலை கிடைப்பதில் கடும் சிரமங்க ளை எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. பிராந்திய கலாச்சாரங்கள், மொழிகள் மீதான தாக்குதலால் பன்முகத்தன்மை அர்த்தமிழந்துவிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை யாக இருந்தாலும் சரி, சரக்கு-சேவை வரியாக இருந்தாலும் சரி, மோடி அரசின் அனைத்து சீர்திருத்த நடவ டிக்கைகளும் மக்கள் விரோதமான வையாக உள்ளன. எனவே, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை, பல்வேறு பொய் கள், திரிபுகள், மிகைப்படுத்துதல்கள், தெளிவற்ற வாக்குறுதிகள் நிரம்பிய மோசமான தேர்தல் உரையாகவே உள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் தனது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.