அமராவதி, ஜூன் 4- ஆந்திராவில் இரசாயன ஆய்வகத்தில் விஷ வாயுக் கசிவால் 178 பெண்கள் மயக்கமடைந்த னர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க - விசா ரணைக் குழுவை அமைத்து ஆந்திர அரசு உத்தர விட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேசத்தில் விஷவாயு கசிவால் 178 பெண்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. ஆந்திரப்பிர தேசத்தின் விசாகப்பட்டினத்தில் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ் என்ற இரசாயன ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலா ளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வாயு கசிவு அருகேயிருந்த நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் உடனடி யாக, தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆய்வகத்தில் ஏற்பட்ட வாயு கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய ஆந்திர அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.