அந்த வீடுகள் அனைத்தும் உங்கள் வீடுதான்: பிரகாஷ் ராஜ்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்த பின்ன ணியில், அரசு குடியிருப்பைக் காலி செய்யவும், ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. இதையொட்டி, “எனக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பைக் காலி செய்கிறேன். இதுவரை கழித்த நினைவுகள் மகிழ்ச்சி யானது” என ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், ராகுலுக்கு நடிகர் பிர காஷ் ராஜ் ஆதரவு தெரி வித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதி விட்டிருக்கும் பிரகாஷ் ராஜ், “கொடுங்கோல் ஆட்சியா ளர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொரு வீடும் உங்கள் வீடுதான் ராகுல் காந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி: பின்வாங்கியது மோடி அரசு
அரசு கூட்டுறவு சங்கங் களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங் களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது ‘தஹி’ என இந்தியில் எழுத ஒன்றிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது. ஆங்கிலத்தில் கர்டு (curd) என எழுதி அதன் கீழ் தஹி என எழுது மாறும், வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளு மாறும் கூறியிருந்தது. இதற்கும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. “குழந்தை யை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சகம் வேண்டாம்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பல ரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ஆவின், தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் ‘தஹி’ என அச்சிட வலி யுறுத்திய அறிக்கையை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறு வனம் திரும்பப் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
கேள்வி நேரத்திலிருந்து... ரூ.12 கோடியில் அவ்வையாருக்கு மணிமண்டபம்
ஓ.எஸ். மணியன் (அதிமுக): வேதாரண்யம் தொகுதியில் அவ்வை யாருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி எப்போது துவங்கும். அமைச்சர் பி.கே. சேகர்பாபு: அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டித் தரப்படும் என கடந்த 2022-23 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான வரைபடத்தை இன்னும் சிறப்பாக அமைக்க முதல மைச்சர் வலியுறுத்தியதால், மறு வடிவம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.12 கோடியில் இந்த மணிமண்ட பத்தை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. பணிகள் விரைவாக நடந்து வருவதால் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.
கலைஞருக்கு நினைவுச் சின்னம்
இரா. மாணிக்கம் திமுக: குளித்தலை தொகுதியிலுள்ள நங்க வரத்தில் 1956 ஆம் ஆண்டு கலைஞரின் தலைமையில் நடந்த பண்ணையை எதிர்த்து நடந்த போராட்டம்தான் விவசாய நில உரிமைப் போராட்டம். எனவே, அந்த இடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க அரசு முன்வருமா? அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: இதுகுறித்து முதலமைச்சரின் கவ னத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி ஆணையம்
க.செல்வராஜ் அதிமுக: பருத்தியை கொள்முதல் செய்து நூற் பாலைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய தனி ஆணையம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? அமைச்சர் ஆர்.காந்தி: தமிழ்நாடு பருத்தி கழகம் என்ற நிறுவனம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை கொள்முதல் செய்து நேரடி யாக விற்பனை செய்வதற்கு உரிய நேரத்தில் தனி ஆணையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும்.
விழுப்புரம் கொலை: முதல்வர் விளக்கம்
சென்னை, மார்ச் 30- விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று (மார்ச் 30) கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கையில், “இச்சம்பவத்தில், இப்ராஹிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரி ழந்தார். இதனையடுத்து வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சனையின்போது, அங்கு தடுக்க வந்த நபர், உயிரிழந்துவிட்டார்” என்றார்.