states

img

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் அளித்திடுக!

கே.வரதராசன் நகர் (திருச்சூர்), டிச.14- அனைத்து வேளாண் விளைபொருள் களின் குறைந்தபட்ச ஆதார  விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு வலியுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தோழர் கே.வரதராசன் நகரில் விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடை பெற்று வருகிறது. இந்த மாநாட்டில்  அம்ரா ராம்  முன்மொழிந்து, ஜூவாலா காந்தி ரங்கா ரெட்டி  வழிமொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்  களுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகள்  போராட்டத்தின் முக்கியமான கோரிக்கை களில் ஒன்று, விவசாய விளைபொருள்களுக் குக் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீ காரம் வேண்டும் என்பதாகும். ஒன்றிய அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்தபோது, விவசாய  விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் அளித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தபோதிலும், ஒன்றிய அர சாங்கம் இதுவரை அதற்காக எவ்வித நட வடிக்கையும் எடுக்காது துரோகம் இழைத்துள்ளது.

விவசாயப் பயிர் வளர்ப்பு குறித்து விவ சாயிகள் முக்கிய முடிவு எடுப்பதற்கு, அதிலி ருந்து கிடைத்திடும் ஆதார விலை மிகவும் முக்கியமாகும். தாங்கள் விளைவித்த பொருட்  களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்  றால் அது விவசாயியையும், விவசாயத்தையும் பெரிதும் பாதிக்கும். நாட்டில் நெல் விளைவித்த விவசாயிகளில் 13.5 விழுக்காட்டினரும், கோதுமை விளைவித்த விவசாயிகளில் 16.2 விழுக்காட்டினரும் மட்டும்தான் தாங்கள் விளைவித்த விவசாயப் பொருட்களை உரிய கொள்முதல் நிறுவனங்களிடம் விற்றிருக்கி றார்கள். நாட்டின் உற்பத்தித் தரவு தொடர் பான அதிகாரப்பூர்வ உற்பத்திச் செலவில் நெல் விளைவித்த விவசாயிகளில் 91 விழுக்  காட்டினரும், கோதுமை விளைவித்த விவசாயி களில் 83 விழுக்காட்டினரும் தாங்கள் விளை வித்த விவசாயப் பொருள்களைக் குறைந்த பட்ச ஆதார விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கே விற்றிருக்கிறார்கள் என்று காட்டுகிறது.  மற்ற விவசாய விளைபொருள்களைப் பொறுத்தவரை அவற்றைக் கொள்முதல் செய்  வதற்கான நிறுவனங்கள் அநேகமாக இல்லை,  இருந்தாலும் பெயரளவில்தான் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் நவீன தாரா ளமயப்   பொருளாதாரக் கொள்கைகளின் கார ணமாக விவசாய உற்பத்திக்கு அரசின் ஆத ரவு என்பது அநேகமாக இல்லை. 

இடுபொருட்கள், டீசல், மின்சாரம் விலை உயர்வு

இதன் காரணமாக வேளாண் இடுபொருள் களின் விலைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உரங்களின் விலை களில் கட்டுப்பாடு இல்லை. டீசலின் விலை  நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. மின் கட்டணம் மீதிருந்த சலுகைகளும் பறிக் கப்பட்டு வருகின்றன. வங்கிகள் கடன் கொடுப்  பது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. இவற்றின் விளைவாகவே விவசாயிகளுக்கு விவசாயத்திலிருந்து வருமானம் வருவது என்பது மிகவும் அற்ப அளவில் இருந்து வரு கிறது. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையம் அளித்திட்ட பரிந்துரையின் படி, விவசாய விளைபொருள்களுக்கு விவ சாய உற்பத்தி நடைபெறும்போது மேற்கொள் ளப்படும் அனைத்துச் செலவினங்களையும் சேர்த்து,  அத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயித்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட ஒன்றிய அரசாங்கம் மறுத்து வருகிறது. இவ்வாறு ஒரு பக்கத்தில் விவசாயிகளுக் குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட மறுத்திடும் அதே சமயத்தில், ஏழை மக்களுக்குப் பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை அளித்திடவும் மறுத்து வருகிறது.

போராட்டங்களை முன்னெடுக்க...

(1)    விவசாய உற்பத்திக்கு அரசின் முழு உதவி யும் அளிக்கப்பட வேண்டும். அதனை அர சாங்கங்கள் வலுப்படுத்திட வேண்டும். வேளாண் இடுபொருட்களைக் கட்டுப் படியான விலைக்கு விவசாயிகளுக்கு அளித்திட முன்வர வேண்டும். இவற்றின் மூலம் வேளாண் உற்பத்திச் செலவினத் தைக் குறைத்திட வேண்டும்.

(2)    எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி அனைத்துச் செல வினங்களையும் உள்ளடக்கி அத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

(3)    வேளாண் உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்திடவும், குளிர்பதனக் கிடங்குகளில் வைத்திடவும் உரிய நட வடிக்கைகளை எடுத்திட வேண்டும்.  

(4)    விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களுக்கு விவசாய விளைபொருட்களைக் கொள்  முதல் செய்திடவும், குளிர்பதனக் கிடங்கு களில் பாதுகாப்பாக வைத்திடவும் போது மான அளவிற்கு ஆதரவு அளித்திட வேண்டும்.

(5)    விவசாய விளைபொருட்கள், கால்நடை உற்பத்திப் பொருட்கள், வனப் பொருள் கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திட சட்ட அங்கீ காரம் அளித்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க, விவசாயிகளை அணிதிரட்டி, போராட்டங் களை முன்னெடுத்துச் செல்லவும் மாநாடு தீர்மா னித்துள்ளது.                   (ந.நி.)

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறுகின்ற விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் ஆதிவாசிகள் உரிமைக்கான தேசிய மேடை சார்பில் அகில இந்திய பொருளாளர் பி.டில்லிபாபு வாழ்த்துரையாற்றினார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் தமிழக பிரதிநிதியான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் பி.துளசி நாராயணன் விவாதத்தில் பங்கேற்றார்.