states

அக்.11 -தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி

சென்னை, அக்.1-  சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போர் அக்டோபர் 11 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் நடைபெறு கிறது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் பங் கேற்குமாறு 9 கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ  மாநிலச் செயலாளர் இரா. முத்தர சன், விசிக தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்  நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.  காதர் மொய்தீன், மனிதநேய மக்கள்  கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹி ருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி  தலைவர் தி.வேல்முருகன் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி சிபிஐ (எம்),  சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில்  சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந் தது. இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்  கள் அமைப்புகளும் பேராதரவு நல்கி யிருந்தன.

இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோ பர் 2 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உரு வாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி  நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நிகழ்வுக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. மாநி லத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நில வரம் குறித்தும், அக்டோபர் 2 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு, மனிதச் சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஆதரவு நல்கிய  அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப் போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம்  தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மதத்தின் அடிப்படையில் பகை மையை ஏற்படுத்தி, அமைதியை சீர்  குலைக்க முயற்சிக்கும் பிரிவினை வாதிகளை இங்கு ஒருபோதும் அனு மதிக்க மாட்டோம் என்று மக்களி டையே தொடர்ந்து பரப்புரை மேற்  கொள்ளவும், சமூக நல்லிணக்கத் தைப் பாதுகாக்கவுமான இந்த மனி தச் சங்கிலி நிகழ்வில் அனைத்து ஜன நாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு

தேமுதிக, இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, சிபிஐ (எம்.எல்- விடுதலை), தமிழ்ப் புலிகள் கட்சி, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம், அகில  இந்திய திரிணாமுல் காங்கிரஸ், தமி ழக விடியல் கட்சி, பீமாராவ் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவாக களம் காணுகின்றன. திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், மே17 இயக்கம், சிஐடியு, ஏஐடியுசி, எல்.எல்.எப்., மக்கள் மன்றம், புலிப்  படை, தமிழ்நாடு இளைஞர் சங்கம்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம், மக்கள் அதிகாரம், டிசம்பர் 3 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம், இந்  திய மாணவர் சங்கம், அனைத்திந் திய மாணவர் பெருமன்றம், தமிழ் நாடு மாணவர்கள் இளையோர் கூட்ட மைப்பு, தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச் சங்கம், தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு, இந் திய தவுஹித் ஜமாத், மக்கள் ஜன நாயக முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் ஆகிய ஜனநாயக இயக்கங்கள் ஆதரிக்கின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;